Thursday 22 February 2024

அறிதலும் புரிதலும் . .

 அறிதலும் புரிதலும் . .

_*முட்டை வெளியில் இருந்து உடைக்கப்பட்டால் ஒரு வாழ்க்கை முடிவடைகிறது...*_
_*அதே முட்டை உள்ளிருந்து உடைக்கப்பட்டால் ஒரு வாழ்க்கை துவங்குகிறது...*_
_*வெற்றியின் ரகசியம்*_
_*எப்பொழுதும்*_ _*உங்களுக்குள் தான்...*_
_*வீணாக வெளியில் தேடாதீர்...!!*_
அறிதலும் புரிதலும்
வேறு வேறாகும்.
பலர் உங்களை அறிந்திருப்பர்கள். ஆனால் வெகு சிலரே உங்களைப் புரிந்திருப்பார்கள்.
நாம் எந்தத் தவறும் செய்யாவிட்டாலும் சில புரிந்து கொள்ளாதவர்களால் வாழ்வில் வலிகளோடு வாழ வேண்டியுள்ளது.
புரிந்து கொள்ளும் அளவிற்கு சிலருக்கு பக்குவம் இருப்பதில்லை.
புரிய வைக்கும் அளவிற்கு நமக்கு பொறுமையும் இருப்பதில்லை.
சிலருக்குச் சொன்னால் புரியும், சிலருக்குச் சொல்லாமல் புரியும்,
*சிலருக்கு பிரிந்தால் தான் புரியும்* .
*உறவின் அருமையும் நட்பின் அருமையும்.*
_*முன்கோபம் அளிக்கும் ஒரே பரிசு*_
_*"இழப்பு".*_
_*கோபம் வரவேண்டிய இடத்தில் வராவிடில் பயனற்றது. வரக்கூடாத இடத்தில் வந்தால் ஆபத்தனது.*_
_*பேச்சில் காட்டும் நிதானமும்... கோபத்தை வெளிபடுத்துவதில் காட்டும் தாமதமும்.... அனுபவத்தின் மிகச் சரியான வெளிப்பாடு.*_
_*கோபம் என்பது ஒரு வினாடியில் முடிந்திட வேண்டும். அன்பு என்பது ஒவ்வொரு வினாடியும் தொடர்ந்திட வேண்டும்.*_

No comments:

Post a Comment