Monday 5 February 2024

வருவது போவது நடப்பது

 வருவது போவது நடப்பது . . .

பிடித்தது எல்லாம்
கிடைப்பதும் இல்லை
கிடைப்பது
எல்லாம்
நிலைப்பதும் இல்லை.
நிலைப்பது எல்லாம்
மகிழ்ச்சியைத் தருவதில்லை..
ஆனாலும்
வாழ்கிறோம்
இது தான் வாழ்க்கை.
எல்லாம் இருந்து
இல்லாதவரைப் போல் பழக
ஆரம்பித்து விட்டால்
எந்த நேரத்தில் எந்தச்
சங்கடங்கள் நெருங்கினாலும்,
எதுவும் பெரிதாக மனதை
பாதிக்கப் போவதில்லை.
என்றென்றும் அமைதியே.
மகிழ்ச்சியாய் வாழ ஆயிரம்
வழிகள் இருக்கிறது
ஆனால்
கவலையின்றி வாழ
மூன்று
வழிகள் தான் உள்ளது.
1) வருவது வரட்டும்
2) போவது போகட்டும்
3) நடப்பது நடக்கட்டும்
என்று
இருப்பது தான்.
மற்றவர்கள் நம்மை மேலே
உயர்த்துவார்கள் என
நம்பிக்கொண்டு இருக்க
வேண்டாம்.
நமக்கான வெற்றியைத்
தன்னம்பிக்கையாலும்.
உழைப்பாலும்
நாம்தான்
உருவாக்க வேண்டும்.
மகிழ்ச்சியின் அளவை
அதிகப்படுத்த வேண்டுமானால்.
எண்ணங்களின் அளவைக்
குறைத்துக் கொண்டே
செல்லுங்கள்.
யாருக்கும் யாரும் அடிமை
இல்லை.
திறமை இருப்பின்
யார்
வேண்டுமானாலும்
வழி நடத்தலாம்.
நம் தவறுகளையும்
புகழ்ந்து பேசுபவர்கள்
நம்மோடு இருக்கும்
உண்மையான துரோகிகள்.
உடைந்து விட்டதாய் ஓர்
ஓரமே கிடந்து அடங்கிப்
போகத் தேவையில்லை.
பிரபஞ்சம் நமக்கானது
அதற்குள் வாழ்தலைத்
தொடங்கலாம்.
எத்தனை பெரிய காயத்தையும்
அது ஆற்றும்.
நாளுக்கு நாள் ஓர் அர்த்தம்
தந்து கொண்டே இருக்கும்
இவ்வாழ்வு.
காரணங்கள் தேடாமலே
வாழவும் வைக்கும்.
வாருங்கள் வாழ்ந்திடலாம்.
இந்த நாள் நமக்கானது.
எவ்வளவு வாய்ப்புகள்
உள்ளன என்பது
முக்கியமல்ல.
அவற்றை எவ்வாறு
பயன்படுத்துகிறோம்
என்பதே முக்கியம்.
கவலைகள் வந்து கொண்டு
தான் இருக்கும்.
அதனை நிரந்தரமாக்குவதும்
தற்காலிகமாக்குவதும்
நம்மிடம் தான் இருக்கிறது.
நிரந்தரமாக்கினால் நாம்
நோயாளி.
தற்காலிகமாக்கினால் நாம்
புத்திசாலி.

No comments:

Post a Comment