Wednesday 21 February 2024

தாய் மொழிகளின் தாய் மொழி நமது அன்னைத் தமிழ். அன்னைத் தமிழுக்கு நாளும் அணி சேர்த்திடும் அருமை இளவல், முத்தமிழ் அறிஞர் கலைஞர் பலமுறை பாராட்டி மகிழ்ந்த மகத்தான மனிதர் கவிஞர் நெல்லை ஜெயந்தா. பேராற்றல் மிக்க கவிஞர், அரசுப் பணியில் சிறப்பாகப் பணியாற்றிய பண்பாளர், திரைப்படப் பாடலாசிரியர், பாமரனுக்குப் புரியும்படி எழுதும் எழுத்தாளர், இலக்கிய உலகின் தனித்துவம் மிக்க சொற்பொழிவாளர், காவியக் கவிஞர் வாலி அவர்களின் அளவற்ற அன்பைப் பெற்ற வாலி பதிப்பகம் உரிமையாளர், எங்கள் மதுரையில் வளர்ந்து தலைநகர் சென்னையில் இன்று அரசு தமிழ் வளர்ச்சிக்கு அரும்பணி ஆற்றிவரும் செம்மொழிச் செம்மல், தமிழக முதல்வரால் தமிழ் வளர்ச்சித் துறை ஒருங்கிணைப்பு அலுவலராக நியமிக்கப்பட்டு கடந்த பல மாதங்களாகச் சுற்றிச் சுழன்று பணியாற்றி வரும் இளவல் நெல்லை ஜெயந்தா வரும் 06-03-2024 அன்று கவிக்கோ விருது மற்றும் ரூ ஒரு லட்சம் பெற உள்ள செய்தியறிந்து அளவற்ற மகிழ்ச்சி. - மனிதத்தேனீ வாழிய பேராற்றல் வாழியவே.





 

No comments:

Post a Comment