Tuesday 27 February 2024

வாழிய மணிவிழாத் தம்பதியர்.

 வாழிய மணிவிழாத் தம்பதியர்.

இன்று இரவு காரைக்குடி செஞ்சை
தினா வள்ளி மகாலில் நடைபெற்ற அருமை நண்பர், காரைக்குடி தமிழ் இசைச் சங்கச் செயலாளர், மருத்துவத் துறை வழிகாட்டி, சமூக ஆர்வலர், எப்போதும் துடிப்போடு இயங்கும் உழைப்பாளி, எஸ் எம் எஸ் வி மேல்நிலைப் பள்ளி மேனாள் ஆசிரியர், சிவகங்கை மாவட்ட செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர்
எனப் பன்முகப் பேராற்றல் மிக்க இனியவர் வி. சுந்தரராமன் - கிரிஜா
அறுபதாம் ஆண்டு நிறைவு விழாவில்
நீதியரசர் கற்பக விநாயகம் தலைமையில், சிக்ரி மேலாண்மைக் கழகத்தின் தலைவர் கலைச் செல்வி மற்றும் மகரிஷி வித்யா மந்திர் தாளாளர் மற்றும் முதல்வர் சேதுராமன், நகரத்தார் பெருமக்கள் அழகப்ப செட்டியார், பெரியணன், எஸ் எம் எஸ் வி பள்ளி நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலையில்
மனிதத்தேனீ
சிறப்புரை ஆற்றிய மகிழ்வான தருணம்.
அருகில் அலமேலு சொக்கலிங்கம், புதுமணத் தம்பதியர்
சொ. ராம்குமார் - நாச்சம்மை தேவி பூஜா உள்ளனர்.
கலைநிகழ்ச்சிகள், உரையரங்கம், சிறப்பு நாதஸ்வரம், பரத நாட்டியம் என ஏராளமான நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
நிகழ்ச்சியை வித்யா லெட்சுமி தொகுத்து வழங்கினார்.
அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், கல்வியாளர்கள், உறவினர்கள் நண்பர்கள் என ஏராளமானோர் பங்கேற்று வாழ்த்தியும் வாழ்த்துப் பெற்றும் மகிழ்ந்தனர்.
வாழிய சுந்தரராமன் கிரிஜா
தம்பதியர் வாழியவே.





























No comments:

Post a Comment