தன்னிலை மறவோம்.
நிறைவேறா ஆசைகளும்
உடன் சேரும்
தினந்தோறும் போராடும்
மனம் காணும் வாழ்விற்கே,
நித்தம் அலைமோதி வாழ்கின்றோம்,
தொடரும் அலையினைப் போல்.
வாழ்வின் பாதை நெடியது,
வாழ்வின் பயணமும் நெடியது,
வாழ்வு முடியும் மட்டும்
பயணமும் தொடர்ந்திடுது.
போராடியே வாழ்வும் முடிவுறுது,
புகழின் நிலை காணாமல்
வாழ்வில் புரிதல் இல்லாமல்
பிறப்பின் வினையினைக் களையாது.
வினையோடு வாழ்வை முடிக்கின்றோம்
வினைகள் தொடரும் நிலையோடு
மீண்டும் பிறக்கும் நிலையோடு.
ஊழ்வினை உன்னை இயக்குது
தன்நிலை ஏதென்று அறியா மனமிது
மாற்றம் காண நினைத்தாலும்
மகுடம் சூட நினைத்தாலும்
அல்லும் பகலும் உழைத்தாலும்
மாண்டு போவது நிச்சயமே.
மரணமே உனை வெல்லும் வாழ்விலுமே
வாகை சூடிய வாழ்வாகினும்
வறுமை நிறைந்த வாழ்வாகினும்
உடன் கொண்டு போவது ஏதும் இல்லை.
கொடுத்து உளம் பகிர நிறை அன்பு உண்டு
அன்பு கொண்டு வாழ்ந்த உள்ளம்
மறைந்த பின்னும் வாழுது.
ஆணவம் கொண்டு வாழ்ந்த உள்ளம்
அகிலத்தால் துறக்குது
உணர்வாய் மனமே
நிலையெனப் புகழைப் பெறுவாய் தினமே.
அகக்கதவை மூடி மனக்கதவை திறந்தாலே
அன்பில் வழியில் அனைத்தும் சிறக்கும்.
No comments:
Post a Comment