Thursday 16 June 2022

தடைகளைத் தகர்த்திடுவோம்.

 தடைகளைத் தகர்த்திடுவோம்.

தெளிந்த அறிவோடும், விழிப்போடும்,
பேராசையை நிறை மனமாகவும்;
சினத்தை பொறுமையாகவும்;
கடும்பற்றை ஈகையாகவும்;
முறையற்ற பால் வேட்பை கற்பாகவும்;
தாழ்வு மனப்பான்மையை நேர் நிறை உணர்வாகவும்;
வஞ்சகத்தை மன்னிப்பாகவும்.
தனக்கும் பிறர்க்கும் தற்காலத்திலும், பிற்காலத்திலும், அறிவிற்கும், உடல் உணர்ச்சிக்கும் வருத்தம் எழாத அளவிலும், முறையிலும்
செயலாற்றினால் நீ நிச்சயம் தடைகளைத் தகர்த்து வெற்றி அடைந்து இன்பமாக வாழலாம்.
உன்னுடைய முக்கிய குறைபாடு எதுவென்றால், நீ யோசித்து தீர்க்கமாக எடுத்த முடிவை செயல்படுத்துவதற்குப் பதிலாக மீண்டும் அதைப் பற்றி ஆலோசித்துக் கொண்டும் பேசிக்கொண்டும் இருக்கிறாய் என்பதுதான்.
நடப்பவை எல்லாம் நன்மைக்கே என எடுத்து கொள், கவலை கொள்ளாதே நம்பிக்கையோடு செயல்படு, நான் இருக்கிறேன் நிழலாக என்றும் உனக்காக நீ செல்லும் இடமெல்லாம்..
உனக்கு எல்லா சூழ்நிலைகளிலும் துணை நிற்பேன். (இறையருள்) என் வார்த்தைகள் மீது நம்பிக்கை வைத்துச் செயல்படு வாழ்க்கையில் நீ உயர்ந்த நிலையை அடைவாய். நல்லதே நடக்கும்.

No comments:

Post a Comment