Thursday 23 June 2022

வழிகாட்டும் உலகம்.

 வழிகாட்டும் உலகம்.

இந்த உலகம் நமக்குப் பலவிதமான மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.
நமக்கு ஏற்ற வகையில் அமைத்துக் கொள்வதற்கு இடம் கொடுக்கிறது.
அற்புதமான இந்த வாழ்க்கையின் சிறப்புகளைத் தெரிந்து கொள்ள சந்தர்ப்பம் கொடுக்கிறது.
எது நல்லது , எது கெட்டது என்பதைத் தெரிந்துகொள்ள ஒரு வழியைக் காட்டுகிறது.
நல்லவனாக வேண்டுமென்றாலும், கெட்டவனாக வேண்டுமென்றாலும் வாழ்வதற்குத் துணைபுரிகிறது.
நம்மால் என்ன செய்ய முடியும் என்பதையும், நம்மால் என்ன செய்ய முடியாது என்பதையும் அறிந்து கொள்ள அறிவைக் கொடுக்கிறது.
காலங்களை எல்லாம் கடந்து, இறைவனை அடைவதற்கு அதன் அவசியத்தை உணர்வதற்கு மட்டும் ஒரு சிலருக்கு மட்டுமே சந்தர்ப்பம் கொடுக்கிறது.
ஒரு சிலருக்கு கிட்டக்கக்கூடிய வாய்ப்பு நமக்கு வாய்த்திருக்கிறது.
இறைவழிபாட்டில் உண்மையை உணர்ந்து, இந்த உலகத்தில் உயர் நிலை அடைய ஆலயங்கள் துணை புரிகிறது.
மேலும் தெளிவடைய, ஆன்மீக ஆசான்கள் வழிகாட்டுதல் உதவுகிறது.
மகிழ்ச்சி என்பது நம்மிடம் இருக்கும் எண்ணங்களே என்பதை உணர்ந்து, எண்ணங்களை இறைவனிடத்தில் செலுத்துவோம்.

No comments:

Post a Comment