Monday 27 June 2022

மாநகர் மதுரையில் இன்று காலை தொடங்கியது வெள்ளாளர் முதலியார் தொழில் வர்த்தக கண்காட்சி.

 மாநகர் மதுரையில் இன்று காலை தொடங்கியது வெள்ளாளர் முதலியார் தொழில் வர்த்தக கண்காட்சி.

இன்று காலை மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் மிகச் சிறப்பாக வெள்ளாளர் முதலியார் தொழில் வர்த்தக கண்காட்சி அதன் தலைவர் விஷால் டி மார்ட் மற்றும் அதன் குழுமங்களின் சேர்மன், அருமை இளவல்
ஆர். இளங்கோவன்
தலைமையிலான குழுவினர் ஏற்பாட்டில் தொடங்கியது.
இன்றும் நாளையும் நடைபெறும் இக்கண்காட்சியில் ஏராளமான மதுரையில் உள்ள நிறுவனங்கள் மட்டும் பங்கேற்றுள்ளன.
பல்லாயிரம் பார்வையாளர்கள் முதல் நாளே வருகை தந்தது கூடுதல் சிறப்பு.
இன்று காலை நாம் சென்ற போது அனைத்து நிறுவனங்களும் அதன் உரிமையாளர்களும் வரவேற்று நிறுவனங்களின் சிறப்பினை எடுத்துரைத்தனர்.
அம்மா செக்யூரிட்டி நிறுவன உரிமையாளர் அண்ணன் முத்துராமலிங்கம், கலைஞர் தொலைக்காட்சி மூத்த செய்தியாளர், ஊடகத்துறையில் கடுகளவும் களங்கமின்றிப் பயணிக்கும் நேர்மையாளர் எம் . சுவாமிநாதன், மடீட்சியா மேனாள் செயற்குழு உறுப்பினர், பாண்டியன் ஊறுகாய் கந்தசாமி, சைபால் சண்முகசுந்தரம், யுவர்ஸ் பப்ளிசிட்டி முருகன், கே கே நகர் கற்பக விநாயகர் திருக்கோயில் பொருளாளர் என். மீனாட்சி சுந்தரம் உள்ளிட்ட பெருமக்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
பண்பாட்டின் மேன்மையை கண்டு மகிழ்ந்த தருணம் - மனிதத்தேனீ















No comments:

Post a Comment