Saturday 11 June 2022

பரத நாட்டிய ஆசிரியை பிரியதர்ஷினி காளிதாஸுக்கு நாட்டிய சிரோமணி விருது வழங்கப்பட்டது.

 பரத நாட்டிய ஆசிரியை பிரியதர்ஷினி காளிதாஸுக்கு நாட்டிய சிரோமணி விருது வழங்கப்பட்டது.

மதுரை ஸ்ரீ முருகன் வைகாசி விசாகம் ஐம்பதாவது ஆண்டு மஹோத்ஸவம் மற்றும்
ஸ்ரீ மஹாருத்ர மஹாயக்ஞ நிகழ்ச்சி இன்று பைபாஸ் ரோடு
ஸ்ரீ சிருங்கேரி மடம் வளாகத்தில் நடைபெற்றது.
மூன்று நாட்கள் நடைபெறும் நிகழ்வில் இன்று முதல் நாள் இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர் மனிதத்தேனீ
ரா. சொக்கலிங்கம் ஆடல் வல்லான் அமரர் டாக்டர் டி. காளிதாஸ் அவர்களின் மகள் ப்ரியா கலாலயா நாட்டிய வித்யாலயா நிர்வாகி பிரியதர்ஷிணி அவர்களுக்கு நாட்டிய சிரோமணி பட்டம் வழங்கிச் சிறப்புரை ஆற்றினார்.
பின்னர் குழந்தைகளின் பரத நாட்டிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
காலை முதல் பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை வரை ஏராளமான சிறப்பு ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
விழாவிற்கான விரிவான ஏற்பாடுகளை அதன் தலைவர் விஸ்வநாதன் அவர்கள் தலைமையில் சத்தியமூர்த்தி, சுப்பிரமணியன், இல. அமுதன், கோபாலகிருஷ்ணன், ஹரி கணேஷ், அம்பி, பாரதி, விசாலம் ஜெயராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் சிறப்பாகச் செய்துள்ளனர்.







No comments:

Post a Comment