மதுரையில் செட்டிநாடு வர்த்தகக் கண்காட்சி தொடங்கியது.
நாணயமும் நா நயமும் நிறைந்த நகரத்தார் சமூகத்தின் தொழில் வணிகத் திருவிழா இன்று காலை மடீட்சியா ஏசி அரங்கில் தொடங்கியது.
நாளை வரை நடைபெறும் இக்கண்காட்சியில் இன்றே பத்தாயிரம் பேர் வருகைதந்து பேராதரவு நல்கி வருகின்றனர்.
நகரத்தார் சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் அன்புச் சகோதரர் ராமநாதன் தலைமையிலான குழுவினர் நேர்த்தியான முறையில் சிறப்பாக ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.
105 அரங்கிற்கும் சென்ற போது அனைவரும் வரவேற்று தங்கள் நிறுவனத்தின் சிறப்பினை எடுத்துச் சொன்னது நெகிழ்வாக இருந்தது.
கிளாசிக் புட்ஸ் எஸ். ஆதப்பன், லெட்சுமி செராமிக் மேலாளர் பழனியப்பன், பால்வி வீரப்பன், தம்பி கேட்டலிஸ்ட் ராம்குமார் சிங்காரம், மகளிர் சங்கத்தின் முன்னோடிகள், இன்னோவேடிவ் அண்ணாமலை, ஏவிஎம் சந்துரு, ஏஎல். பெரியகருப்பன், ஆர்கிடெக்ட் லெட்சுமணன், அரவிந்த் ஸ்நாக்ஸ் திண்ணப்பன், குறிச்சி சபா. மணிகண்டன், கே ஆர். ஞானசம்பந்தன், வி. சீனிவாசன், ஐயப்பன், அண்ணன் சாத்தப்பன், தொண்டர் சொக்கலிங்கம்,ராஜா முத்தையா மன்றத்தின் மேலாளர் பழனியப்பன், ரோட்டரி மேனாள் ஆளுநர் சைபால் சண்முகசுந்தரம், யுவர்ஸ் பப்ளிசிட்டி முருகன் உள்ளிட்ட பெருமக்கள் சந்தித்து கண்காட்சியைப் பார்வையிட்டு புதிய மேலாண்மைக் களம் கண்ட மகிழ்வான தருணம் இன்று.
No comments:
Post a Comment