Thursday 15 April 2021

இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வேண்டும்..! கேரள எம்எல்ஏ பி.சி.ஜார்ஜ் வலியுறுத்தல்..!

 இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வேண்டும்..! கேரள எம்எல்ஏ பி.சி.ஜார்ஜ் வலியுறுத்தல்..!

கேரளத்தின் பூஞ்சார் தொகுதி யில் இருந்து 6 முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பி.சி.ஜார்ஜ். இந்தத் தேர்தலிலும் இதே தொகுதியில் போட்டியிட்டு முடிவுக்காக காத்திருக்கிறார்.
கேரள காங்கிரஸ் (எம்) கட்சியில் இருந்த இவர், 2011 முதல் 2015 வரை சட்டப்பேரவையில் உம்மன் சாண்டி அரசின் தலைமைக் கொறடாவாக இருந்தார். தொடர்ந்து கேரள காங்கிரஸ் (எம்) கட்சியில் இருந்து வெளியேறிய அவர், கடந்த 2016 தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வென்றார். கடந்த 2017-ல் கேரள ஜனபக்ஸக்ஷன்(மதச்சார்ப்பற்ற) என்னும் கட்சியைத் தொடங்கினார். அவரது கட்சிக்கு கோட்டயம் மாவட்டத்தில் நல்ல செல்வாக்கு உள்ளது.
இடுக்கி மாவட்டம், தொடு புழாவில் பழங்குடியினர் நலனுக் கான தன்னார்வ தொண்டு நிறுவன மான ‘எச்ஆர்டிஎஸ் இந்தியா’ சில நாட்களுக்கு முன்னர் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. இந்த நிகழ்ச்சிக்கு பி.சி.ஜார்ஜ் சிறப்பு பேச்சாளராக அழைக்கப் பட்டிருந்தார்.
அந்தக் கூட்டத்தில் பேசிய ஜார்ஜ்,
“லவ் ஜிகாத் என்பது மிக, மிக உண்மை. இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்ற முஸ் லிம்கள் திட்டமிட்டுள்ளனர்.
2016’ஆம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடியால் பணமதிப்பிழப்பு அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், வெளிநாட்டினரின் நன்கொடைகள் நிறுத்தப்பட்டு, இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்றும் திட்டத்தை மேலும் தாமதப்படுத்தியது.
அதனால் இந்தியாவை உடனே இந்து தேசமாக அறிவிக்க வேண்டும்.
முஸ்லிம்கள் 2030-க்குள் தங்கள் எண்ணத்தை நிறைவேற்ற காத்திருக்கிறார்கள்.
2030’க்குள் இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்றுவதற்காக கேரளாவில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) மற்றும் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி (எல்.டி.எஃப்) ஆகிய இரண்டு கூட்டணிகளும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
இதேபோல் கிறிஸ்தவ நாடான பிரான்ஸையும் இஸ்லாமிய நாடாக்க முயற்சிக்கிறார்கள். எந்தவொரு குறிப்பிட்ட மதத்திற்கும் தேசத்தை அர்ப்பணிக்கலாமா? அதைப் பற்றி யாராவது பேச வேண்டாமா? அதனால்தான் நான் பேசுகிறேன்.
இஸ்லாமியர்கள் நாடான அரேபியாவில் இஸ்லாமைத் தவிர மற்ற மதங்களை பொருத்தமற்றதாக நினைக்கிறார்கள்.
உச்ச நீதிமன்றமே லவ் ஜிகாத் இல்லை என்கிறது.ஆனால் நான் லவ் ஜிகாத் இருக்கிறது என்பேன். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க இந்தியாவை இந்துதேசமாக அறிவிக்கவேண்டும்” என்றார்,கேரள அரசியலில் “ஒன் மேன் ஆர்மி” என்று அறியப்பட்ட ஏழு முறை எம்எல்ஏவான ஜார்ஜ்.

No comments:

Post a Comment