Tuesday 20 April 2021

புரிதல்.....

 புரிதல்.....

புரிதல் இருக்கும் இடத்தில் *ஆணவத்திற்கு* வேலை இல்லை...
புரிதல் இருக்கும் இடத்தில் *அடுத்தவர்* ஆலோசனை தேவையில்லை....
புரிதல் இருக்கும் இடத்தில் *நீயா நானா* என்ற போட்டியில்லை...
புரிதல் இருக்கும் இடத்தில் *பிரிவிற்கு* இடமே இல்லை....
புரிதலில் தான் *அன்பு* அழகாய் மலர்கிறது...!!!!
உனது கவலைகளை ஒரு போதும் மற்றவர்களின்....
அனுதாபத்திற்காகப் பயன்படுத்தாதே...!!!!
நம்மளோட பாசத்தை மட்டும் வேணும்னு நினைக்கிறவங்க....
நம்ம கோவத்தை புரிஞ்சுக்கவே மாட்றாங்க....!!!!
நிஜத்தை வைத்துக்கொண்டு.....
நிழலை தேடிச் செல்கிறோம்....
வாழ்க்கை என்னும் பயணத்தில்....!!!!
பல கெஞ்சல்கள் கூட பிடித்தவர்களின் ....
கோபத்தை கட்டுப்படுத்தும் மருந்து தான்...*சிலரிடம்* மட்டும்....!!!
தன் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு நடப்பவர்பளையே....
நல்லவர்கள் எனப் புகழும் இந்த உலகம்....!!!!!
இல்லாததை மட்டும் அழகு என்று நினைத்துக் கொண்டிருந்தால்.....
இருப்பது எதுவும் அழகாய் தெரிவதில்லை....!!!!
தேடும் போதெல்லாம் நாம் கிடைக்கிறோம் என்பதால்....
ஏனோ நம்மை அடிக்கடி தொலைக்கிறார்கள்.

No comments:

Post a Comment