Thursday 22 April 2021

ஆழ்ந்த இரங்கல்.

ஆழ்ந்த இரங்கல்.
பசித்த ஒருவனுக்கு இலவசமாக மீனைக் கொடுப்பதை விட மீன் பிடிக்க கற்றுத் தாருங்கள் என்ற இலக்குடன் தொடங்கப்பட்ட உலகலாவிய ஜேசி இயக்கத்தில், நமது தமிழகத்தில் தலைசிறந்த பயிற்சியாளராக, சர்வதேசப் பயிற்சியாளர்கள் வந்து பயிற்சி பெறும் மகா குருவாகத் திகழ்ந்த திருச்சி பஞ்ச் என்ற பஞ்சநாதன் அவர்கள் இன்று இறைவன் திருவடி அடைந்த செய்தி அறிந்து கவலையுற்றேன்.
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அவர்களது பேராற்றல் மிக்க பயிலரங்கில் ஒரு மாணவனாக 1985 இல் பங்கேற்றுப் பயன்பெற்றதை பசுமையான நினைவாக எண்ணிப் பார்க்கின்றேன்.

வாழிய அவர் புகழ் - மனிதத்தேனீ 



No comments:

Post a Comment