மாநகர் மதுரையில் தடுப்பூசித் திருவிழா.
2 ஆம் நாள்
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நமது தமிழக அரசு மதுரை மாநகராட்சி மூலம் சேதுபதி மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் பழமுதிர்ச் சோலை திருவருள் முருகன் பக்தசபை ஒருங்கிணைப்பில் நேற்று முதல் கொரோனா தடுப்பூசியை 45 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு மிக நேர்த்தியாகச் சமூக இடைவெளியுடன், மிகுந்த சுகாதார வசதியுடன் காலை 9-30 மணி முதல் மாலை 4 மணி வரை போடப்படுகின்றது.
எந்தவித கட்டணமும் இல்லாமல் மக்கள் நலன் கருதி இந்தத் திருப்பணி நடைபெறுகிறது.
பயனாளிகளுக்கு நல்ல காற்றோட்ட வசதி, தேநீர், பிஸ்கட் உள்ளிட்ட ஏற்பாடுகள் உள்ளது. ஆதார் நகல் எடுத்துச் செல்லவும்.
No comments:
Post a Comment