வாழிய பல்லாண்டு.
இன்று அகவை 61 இல் தடம் பதிக்கும் அன்புச் சகோதரர், பண்பாட்டுப் பெட்டகம், பணியாற்றும் நிறுவனத்தில் நாற்பதாண்டு கால நம்பிக்கை நட்சத்திரம், பழனிக் காவடி எடுப்பதில் கடந்த முப்பதாண்டு கால பங்களிப்பு.
மற்றும் கல்வி நிலைய வளர்ச்சியில் அயராத உழைப்பு, வளரும் தலைமுறைக்கும் வளர்ந்த தலைமுறைக்கும் முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வழிகாட்டும் செய்திகளை வழங்குதல் என எதையும் நேர்த்தியாகச் செய்திடும் அம்பத்தூர் வாழ் எளிமை.
கோனாபட்டு சுப்பு என்ற
வி. சுப்பிரமணியன்
அவர்கள் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன்.
No comments:
Post a Comment