Monday 29 November 2021

மக்கள் வெள்ளத்தில் அன்பு

 மக்கள் வெள்ளத்தில் அன்பு

நா. சிதம்பரம் செட்டியார் எண்பதாம் ஆண்டு விழா.
நேற்று காலை கண்டனூரில் நடைபெற்ற மதுரை தொழிலதிபர், கடுமையான உழைப்பாளி, ஜெராக்ஸ் தொழில் நுட்ப ஆரம்ப கால முன்னோடி, பக்தர்களின் பைகளுக்குள் முதன் முதலில் தனது பெரும் முயற்சியில் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் திருவுருவப் படத்தினை வைத்திடச் செய்த பெருமகன், கடந்து நாற்பது ஆண்டுகளாக மாநகர் மதுரையில் பெரும் கொடையாளர், நகரத்தார் பல்வேறு அமைப்புகளில் நிர்வாகியாகச் செயல்பட்டவர், நண்பர்களையும் உறவினர்களையும் மிகுந்த பேரன்புடன் நடத்தி வரும் பண்பாளர், அருமை அண்ணன்
அன்பு நா. சிதம்பரம் செட்டியார் - கண்ணம்மை ஆச்சி
எண்பதாம் ஆண்டு நிறைவு விழாவில்
மனிதத்தேனீ, அலமேலு சொக்கலிங்கம், கஸ்தூரி கிருஷ்ணன், கண்டனூர் குழு மற்றும் ஆனந்தம் அன்பர்கள் குழு உள்ளிட்ட 7 வாட்சாப் குழுவின் அட்மின்
என். சரவணன், லெட்சுமி விலாஸ்
தே. ஐயப்பன், விசாலாட்சி ஐயப்பன், விழா நாயகரின் இளைய மாப்பிள்ளை மணி ஆறுமுகம் உள்ளனர்.
மற்றும் விகாஸ் ரத்னா பிச்சை குருக்கள், நீதியரசர் எம். சொக்கலிங்கம், மதுரை நகரத்தார் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் ஆர். மெய்யப்பன், எஸ்எம் எஸ்பி. வெங்கடாஜலம், வி. வயிரவன், எல் எஸ். கணேசன் மற்றும் வயிரவன் கோவில் நடப்பு தலைவர் கே.ஆர். மீனாட்சி சுந்தரம், பொருளாளர் கார் லேனா என்ற ஏஎல் எஸ்பி. லெட்சுமணன், எஸ் பி எஸ் எஸ் . ஆறுமுகம், மதுரை நகரத்தார் சங்கத்தின் முன்னோடிகள் கதிரேசன் பேப்பர் ஸ்டோர்ஸ் ராமநாதன், சகானா சத்தியமூர்த்தி, எம். முருகப்பன், சி, லெட்சுமணன், ஆர். கதிரேசன், அருளிசை மணி வீர. சுப்பிரமணியன்,கொத்தமங்கலம் எம். ராமநாதன், வடு. கண்ணன், அருண் வீரப்பா, லெ மு மு. லெட்சுமணன், அங்கயற்கண்ணி, தேனப்பன், கோனாபட்டு முருகப்பன், பாகனேரி பெருங்கொடையாளர் தியாகராஜன், மாலதி தியாகராஜன், காரைக்குடி செக்காலை கோட்டை நகரத்தார் சங்கத்தின் தலைவர் நாச்சியப்பன், பெல். மணி, கீழையூர் வயிரவன், என். மெய்யப்பன், கீதா மெய்யப்பன், கண்டனூர் சீமான் கண்ணப்பன், முதியோர் நலன் காக்கும் பள்ளத்தூர் முத்து செட்டியார், மீனாட்சி அச்சகம் எஸ். திருநாவுக்கரசு உள்ளிட்ட ஏராளமான பெருமக்கள் பங்கேற்று வாழ்த்துப் பெற்றனர்.
மக்கள் திருவிழா போல பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது.
ஏற்பாடுகளை அன்பு குடும்பத்தினர் சித. சிவக்குமார் - லெட்சுமி,
தீ. சொ. ராம. சொ. ரவி - நாச்சாள், ராம. வீரப்பன் - தேனம்மை,
மணி ஆறுமுகம் - வள்ளிமலர் மற்றும் அவர்கள் உறவினர்கள், கண்டனூர் நகரத்தார்கள் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.
வாழிய அன்பு குடும்பத்தினர்.






No comments:

Post a Comment