Thursday 11 November 2021

மாற்றம் நம்மிடம் இருந்து.

 மாற்றம் நம்மிடம் இருந்து.

எல்லோரும் ஏதோ ஒரு மாற்றத்தை வாழ்வில் விரும்பிக்கொண்டு தான் இருக்கின்றனர். பெரிய வீடு வேண்டும், இன்னும் அதிகப் பணம் வேண்டும் என்ற மாறுதலுக்காக மனம் விரும்பிக்கொண்டே இருக்கின்றது.
ஆனால் ஒரு ஞானி மட்டும் இப்படி இறைவனிடம் மன்றாடினார். புரட்சிகளை அதிகம் விரும்பிய இளைஞனாய் நான் இருந்த போது, "கடவுளே, உலகை மாற்றும் வரம் தா!" என்று இறைவனிடம் வேண்டினேன்.
நடுத்தர வயதை அடைந்தபோது, என் வேண்டுதல் சிறிது மாறியது: கடவுளே, என் குடும்பத்தினரை, நண்பர்களை, என்னைச் சுற்றியுள்ளவர்களை மாற்றும் வரம் தா! என்பது என் வேண்டுதலானது, இப்போது வயது முதிர்ந்த நிலையில், என் இறுதி நாட்கள் எண்ணப்பட்டுள்ளன என்பதை உணர்கிறேன். இப்போது நான் வேண்டுவது ஒன்றே... கடவுளே, என்னையே நான் மாற்றிக் கொள்ளும் வரம் தா! என்பதே என் இப்போதைய வேண்டுதல்.
இந்த வேண்டுதலை நான் ஆரம்பத்திலிருந்தே வேண்டியிருந்தால், என் வாழ்வு எவ்வளவோ மாறியிருக்கும். என்னைச் சுற்றியிருந்தவர்களும் மாறியிருப்பர். இந்த உலகமும் மாறியிருக்கும்.
அன்பர்களே! "உலகில் நாம் காண விழையும் மாற்றம் நம்மிடம் முதலில் துவங்க வேண்டும்" என்று சொன்னவர் மகாத்மா காந்தி.
மாற்றங்களின் ஆரம்பம்... உலகமா, உள்ளமா? சிந்தியுங்கள்.

No comments:

Post a Comment