உழைப்பு மட்டுமே வெற்றிக்கு முகவரி.
1.அனுபவங்கள் எதையும் வீணாக்காதே. ஒவ்வொரு அனுபவமும் வழித்துணை விநாயகர்.
2.வாழ்வில் ஒரே ஒரு குறிக்கோள் மட்டும் வை.
இதுவா அதுவா பிசினஸே வேண்டாம்.
3.லட்சியத்தை எப்போது நினைக்கிறாய் என்பது முக்கியமல்ல.
முடிவு செய்த கணத்திலிருந்து அதைப்பற்றி மட்டுமே யோசி.
4.உன் வேலை எதுவானாலும் அதை ஆழமாக நேசி. உயிரைக் கொடுத்து உழை.
5.புகழ் பணம் இரண்டும் மனிதனுக்கு அவசியம்.
இதில் வெட்கப்பட ஒன்றுமில்லை என்று நம்பு.
6.புகழுக்காகவும் பணத்துக்காகவும் உழைத்தாலும் உன் பணியில் ஒரு நேர்த்தி எப்போதும் இருக்க வேண்டும். அப்போதுதான் புகழும் பணமும் நிலைக்கும்.
7.செய்யும் பணியில் மட்டுமல்ல, வாழ்விலும் ஒழுங்கு அவசியம்.
லயமோடு வாழப் பழகு.
8.அதிர்ஷ்டத்தை நம்பாதே.
வெற்றி என்பது உழைப்பால் மட்டுமே வருவது.
9.திறமையை வளர்த்துக் கொள். எதையும் தெரிந்து கொள்வதில்
போதும் என்ற மனமே கொள்ளாதே.
No comments:
Post a Comment