Thursday 18 November 2021

பேராற்றல் பெற்றுத் தந்த பணி.

பேராற்றல் பெற்றுத் தந்த பணி.
நீதித் துறையில் புதிய உயரங்களைப் பெற்று குலத்தின் சிறப்புக்குச் சிறப்புச் சேர்த்திட வாழ்த்துகின்றேன்.
சொக்கநாதபுரம், இளையாத்தங்குடி கோவிலைச் சேர்ந்த திரு. அ. சா. அ. சம்பத் செட்டியார் அவர்கள் மகனும், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றும்
எஸ் . சித்திரை ஆனந்தம் @ அடைக்கப்பன் இந்து சமய அறநிலையத் துறை உயர்மட்ட அலுவலகத்தின்( Panel Advocate) பேனல் அட்வகேட் ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பதறிந்து மகிழ்ச்சி.
இவர் வழக்கறிஞராக உள்ள பல முன்னணி நிறுவனங்களில் தன் திறமான வாதங்களால் மிகப் பெரிய வழக்குகளில் எளிதான வெற்றிகளைக் குவித்திட்ட இளைஞர்.
நா நயத்தால் நாளும் மேன்மை பெற்று வரும் இவர் எங்கள் பெரிய தகப்பனார் மகன் பள்ளத்தூர் வங்களாகார வீடு சிவ.கா.வ. வள்ளியப்பன் செட்டியார் அவர்களின் மாப்பிள்ளை என்பது குறிப்பிடத்தக்கது.
வளரட்டும் பேராற்றல்
தொடரட்டும் சாதனைச் சரித்திரம்.

வாழ்த்தி மகிழும் - மனிதத்தேனீ 



No comments:

Post a Comment