Saturday 20 November 2021

பணி சிறக்கட்டும்

 பணி சிறக்கட்டும்.

பாரம்பரியம் மிக்க அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பொறுப்பிற்கு அப் பல்கலை வேளாண்புலத் தலைவராகப் பணியாற்றிய, காரைக்குடி நேமம் கோவிலைச் சேர்ந்த
Dr. RM. கதிரேசன் அவர்கள்
நியமனம் செய்யப் பெற்றுள்ளார் என்ற செய்தியறிந்து மகிழ்ச்சி.
பேராற்றலும் பல் துறை சார்ந்த நுண்ணறிவும் மிக்க கல்வியாளர். வளரும் தலைமுறைக்கு வழிகாட்டும் திருக் கோவிலாக மீண்டும் நமது அண்ணாமலைப் பல்கலைக் கழகம் உயர்ந்திட இந்த நாளில் வாழ்த்திப் பாராட்டி மகிழ்ந்திடுவோம்.
யாரிடமும் சென்று பரிந்துரையோ, அதற்காக துளியும் பொருட்டு செலவோ செய்திடாமல் தனது நாணயத்தின் துணையுடன் துணை வேந்தராகப் பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டுள்ளார் என்பது வணங்குதற்குரியது.
வாழிய பேராற்றல் வாழிய உயர் கல்வித்துறை.
வாழிய தங்கள் கல்விப் பணி.
- மனிதத்தேனீ




No comments:

Post a Comment