Monday 29 November 2021

பிறர் கவனத்தைக் கவர்வது குறை சொல்லும் பலரது நிலை.

 பிறர் கவனத்தைக் கவர்வது குறை சொல்லும் பலரது நிலை.

குறை சொல்தல் இன்றைக்கு ஒரு தொற்று நோயாகவே மாறி விட்டது.ஒரு வகையில் மிகவும் எளிதான ஒரு வேலை குறை சொல்லுதல்.
சின்ன வயதிலேயே அது நமது இரத்தத்தோடு கலந்து விட்டது. ஓடிப் போவோம், கல்லில் இடித்துக் கொள்வோம், திட்டுவது என்னவோ அந்தக் கல்லைத் தான் இல்லையா ?
குறை சொல்வது மனிதனுடைய குறைபாடு ! அடுத்தவர்களை மட்டம் தட்டுவதன் மூலம் தனது உயரத்தை அதிகரிக்கச் செய்யும் முயற்சி இது.
ஆழ்மனதில் உறைந்து கிடக்கும் நமது விரோதத்தின் வேர்களே இந்தக் குறையெனும் முட்களை விளைவிக்கின்றன.
அடுத்தவருடைய வளர்ச்சியோ, நிம்மதியோ,
புகழோ, அழகோ மனசுக்குள் விதைக்கும் பொறாமை விதைகள் தான் பெரும்பாலும் குறைகளாய் முளை விடும்.
தன்னிடம் இல்லாத ஒன்றின் பள்ளத்தாக்கை நிரப்ப முயலும் மனதின் விகார முயற்சிகளில் இதுவும் ஒன்று.
ஈகோவை விலக்க வேண்டுமென முடிவெடுத்தால் இந்தக் கெட்டப் பழக்கம் உங்களை விட்டுப் போய் விடும்.
குறை சொல்பவர்கள் தொடர்ந்து குறை சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அட குறையைப் போக்கும் வழியைத் தேடணுமே என்பதை மறந்து விடுவார்கள்.
இருப்பதில் திருப்தியடையாதவர்கள் குறை சொல்வதில் கில்லாடிகளாக இருப்பார்கள்.
தன்னை புத்திசாலியாகக் காட்டிக் கொள்ளவோ, அல்லது கவனத்தை இழுக்கவோ கூட பிறர் மீது சிலர் குறைகளை அள்ளித் தெளித்துக் கொண்டே இருப்பதும் உண்டு.
குறை சொல்தல் வெறுமனே உங்கள் வாழ்க்கையை மட்டும் பாதிப்பதில்லை. உங்களுடைய ஆழமான குடும்ப வாழ்க்கைக்கே அது கொள்ளி வைத்து விடும்.
குறை சொல்வது ஒரு மிகப்பெரிய உறவு எதிரி !
ஆம்.,நண்பர்களே..,
குறை சொல்வதற்கான தருணங்களில் கவனமாய் இருங்கள்.
அந்தக் கவனம் உங்களில் எப்போதும் இருந்தால் படிப்படியாய் நீங்கள் குறை சொல்லும் குறையை விட்டு வெளியே வர முடியும்.
வாழ்க்கையும் ரொம்ப அழகானதாய்த் தெரிய ஆரம்பிக்கும்.
குறைகளைக் களைவோம், நிறைவு அடைவோம்.

No comments:

Post a Comment