Saturday 20 June 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

இந்தியாவின் நடவடிக்கைகள் வலுவானது மற்றும் புத்திசாலித்தனமானது.. அமெரிக்கா...!
அமெரிக்கா ஏற்கனவே இந்தியாவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளதுடன், தனது ஆதரவையும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்திய எல்லையில் நடந்த தாக்குதல் சம்பவம் சீன ராணுவத்தின் திட்டமிட்ட செயல் என அமெரிக்க மூத்த செனட் உறுப்பினரும் பெரும்பான்மை தலைவராகவும் உள்ள மிட்ச் மெக்கானெல் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
மேலும் சீன மக்கள் விடுதலை ராணுவம் இந்திய பகுதிகளை கைப்பற்றும் நோக்கத்தில் மிக மோசமான வன்முறையை தூண்டியிருப்பதாக தோன்றுகிறது என்று,செனட் சபையில் வெளியுறவு கொள்கை குறித்து உரை நிகழ்த்தியுள்ளார்.
மேலும்,அமெரிக்காவின் நலன்களையும் அதன் நட்பு நாடுகளையும் சீனா அச்சுறுத்தி வருகிறது, இரு அணுசக்தி நாடுகளுக்கு இடையிலான இந்த வன்முறையை உலகம் முழுவதும் கண்டிக்கிறது. பதற்றத்தை அடக்குவதில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம், அமைதி நிலவும் என்று நம்புகிறோம் என்ற அவர், சீனா தனது எல்லையில் உள்ள மக்களிடம் எந்த அளவிற்கு அட்டூழியங்களில் ஈடுபட்டுவருகிறது, உலக வரைபடத்தை சீனா சுயமாக தீர்மானிப்பது எப்படி.? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் சீன கம்யூனிஸ்ட் கட்சி தொற்றுநோயை மூடி மறைத்தது, ஹாங்காங்கில் உள்ள மக்களை துன்புறுத்தும் வகையில் நடந்து வருவதுடன், அந்தப்பகுதியில் கட்டுப்பாட்டையும், தன் தலையீட்டையும் உறுதிபடுத்தியுள்ளது. அதேபோல் ஜப்பானை தென்சீனக் கடல் பிராந்தியத்தில் மிரட்டியது, சீனாவின் போர் விமானங்கள் தைவானில் நான்கு முறை வட்டமடித்துள்ளது என்றார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஜிம் பேங்க்ஸ் இந்தியா, சீனாவுடன் எடுத்துள்ள முடிவு சரியானது என வரவேற்றுள்ளதுடன், சீனாவால் இந்தியாவை அச்சுறுத்த முடியாது என்றும், இந்தியாவின் நடவடிக்கைகள் வலுவானது மற்றும் புத்திசாலித்தனமானது எனவும் கூறியுள்ளார்.
நன்றி ராஜப்பா தஞ்சை

No comments:

Post a Comment