Monday 8 June 2020

எங்கே போகிறது போதை...

எங்கே போகிறது போதை...
கணவனின் கூட்டு பலாத்காரம்... புத்திசாலி டிஎஸ்பி..
ஆரம்பகட்ட தகவல்களின் அடிப்படையில் சம்பவத்தைப் பற்றி சொல்கிறோம்.
கேரளாவின் திருவனந்தபுரம் அருகே கடிமன்குளம் பகுதி. கடற்கரை பக்கம் உள்ள தனது நண்பரின் வீட்டுக்கு சென்று வரலாம் என மனைவியை நேற்று முன்தினம் ஐந்து வயது மகனோடு அழைத்துச்சென்றான் கணவன்.
நண்பரின் வீட்டில் திடீரென மனைவிக்கு வலுக்கட்டாயமாக மதுவை ஊற்றி மயக்கமடையச் செய்துவிட்டு நான்கு நண்பர்களோடு சேர்ந்து மனைவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான் சாடிஸ்ட் கணவன்..
இதுமட்டுமன்றி பெண்ணின் உடலில் சிகரெட் சூடு வைத்தும் சித்ரவதை செய்துள்ளனர்..
இவ்வளவு கொடூரங்களும் ஐந்து வயது மகன் கண்முன்னாலேயே நடத்தப்பட்டுள்ளன..
சம்பவம் பற்றி தெரியவந்ததும் ஐந்து பேரையும் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்..
இந்த இடத்தில் டிஎஸ்பி- பேபி தனது புத்திசாலித்தனத்தை காண்பித்துள்ளார்..
கூட்டு பலாத்காரம் என்பது ஐந்து வயது சிறுவன் முன் நிகழ்த்தப்பட்டுள்ளதால் கணவன் உள்ளிட்ட 5 பேர் மீதும் போஸ்கோ சட்டம் பாய்ச்சப்பட்டுள்ளது..
முழு பயங்கரத்தையும் விவரிக்க ஆரம்பித்தால் 5 பேருக்கும் மரண தண்டனை என்பதே மிகக் குறைவாகத்தான் இருக்கும் என்று சொல்வீர்கள்... அந்த அளவுக்கு ஐந்து பேரும் காமத்தையும் தாண்டி சித்திரவதை வெறியோடு கொடூரன்களாக இருந்துள்ளனர் ..
நன்றி எழுமலை வெங்கடேசன்

No comments:

Post a Comment