*கவியரசு வாட்ஸ் அப்*
**************** ********
குறுஞ்செய்தி & வாட்ஸ் அப் சேவையில் 12வது ஆண்டு.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
20.06.2020 சனிக்கிழமை
பின்னனி பாடகர் ஏ.எல்.ராகவன் சூன்-19 அன்று காலமானார்
நடிகை எம்.என்.ராஜம் அவர்களின் கணவரும் பிரபல பாடகருமான் ஏ.எல்.ராகவனின் திறமைக்கு பல பாடல்கள் அமைந்தன.
"பார்த்தால் பசி தீரும்" படத்தில் "அன்று ஊமைப் பெண்ணல்லோ" "நெஞ்சில் ஓர் ஆலயம்" படத்தில் பாடிய "எங்கிருந்தாலும் வாழ்க", இருவர் உள்ளம் படத்தில் "புத்தி சிகாமணி பெத்த புள்ள", வேட்டைக்காரன் படத்தில் "சீட்டுக்கட்டு ராஜா", பூவா தலையா படத்தில் "போடச்சொன்னா போட்டுக்கறேன்" என்று பல தனித்துவம் மிக்க பாடல்களை ரசிகர்கள் அன்றும், இன்றும் கேட்டு கொண்டே இருக்கின்றனர்.
கவியரசர் கண்ணதாசன் எழுதி, ஏ.எல்.ராகவன் பாடிய பாடல் ஒன்று.
எங்கிருந்தாலும் வாழ்க
உன் இதயம் அமைதியில் வாழ்க
மஞ்சள் வளத்துடன் வாழ்க
உன் மங்கலக் குங்குமம் வாழ்க
வாழ்க...வாழ்க...
எங்கிருந்தாலும் வாழ்க..
இங்கே ஒருவன் காத்திருந்தாலும்
இளமை அழகைப் பார்த்திருந்தாலும்
சென்ற நாளை நினத்திருந்தாலும்
திருமகளே நீ வாழ்க
வாழ்க...வாழ்க...
எங்கிருந்தாலும் வாழ்க..
வருவாய் என நான் தனிமையில் நின்றேன்
வந்தது வந்தாய் துணையுடன் வந்தாய்
துணைவரைக் காக்கும் கடமையும் தந்தாய்
தூயவளே நீ வாழ்க
வாழ்க...வாழ்க...
எங்கிருந்தாலும் வாழ்க..
ஏற்றிய தீபம் நிலை பெற வேண்டும்
இருண்ட வீட்டில் ஒளி தர வேண்டும்
போற்றும் கணவன் உயிர் பெற வேண்டும்
பொன்மகளே நீ வாழ்க
வாழ்க...வாழ்க
எங்கிருந்தாலும் வாழ்க..
படம் : நெஞ்சில் ஒரு ஆலயம்
**கரொனா சிந்தனை!*
தேனீர் கடைகளில்,
எப்போதும் சூடாகவே,
பேசப்படுகிறது
கரொனா வதந்திகள்!
கண்ணன்சேகர்
9698890108.
No comments:
Post a Comment