Saturday 23 March 2024

உந்து சக்தி . .

 உந்து சக்தி . .

தன்னம்பிக்கை என்பது
தன்னை நம்புதலாகும்,
கடின உழைப்பு,
விடாமுயற்சி,
திட்டமிடல்
என்றெல்லாம் சொல்லுகிறோம். இவைகளையெல்லாம் சும்மா வெறுமனே பின்பற்ற முடியாது,
தன்னம்பிக்கை இருந்தால் தான் அவைகளெல்லாம் கைகூடும்.
எனவே எல்லாவற்றிர்க்கும்
அடிப்படை தன்னை நம்புதலாகும்.
ஒரு வாகனத்தை, ஒரு இரயில் வண்டியை ஏதோ ஒரு இயந்திர சக்தி உந்தித் தள்ளி விடுகிறதல்லவா, அது போலத் தன்னம்பிக்கை
என்னும் மனித சக்தி நம்மில் நிறைந்து இருந்தால் தான் அது முன்னேற்றப் பாதையை நோக்கி
நம்மை உந்திச் செல்லும்
சிறிதளவேனும் தன்னம்பிக்கை இல்லாதவர்கள்
யாருமே இருக்க முடியாது,
பிச்சைக்காரர் கூட நான் பிச்சை எடுத்தால் இவ்வளவு சம்பாதிப்பேன் என்ற தன் மீதுள்ள நம்பிக்கையில் தான் களத்தில் இறங்குகிறார்.
இயற்கையிலே
நாம் நம் மீது நம்பிக்கை கொண்டவர்களாகவே இருக்கிறோம், ஆனால் அது போதுமான அளவு இருப்பதில்லை.
அதை வளர்த்துக் கொள்வதே
நம் வளச்சிக்கான
சரியான வழியாகும்.
சிறிதளவே நம்பிக்கையை வைத்துக் கொண்டு செயலில் இறங்கினால் இறுதியில் சோர்ந்து, துவண்டு போய் விடுவோம்,
முழுவதுமாக நிரம்பப் பெற்ற நம்பிக்கையே வெற்றியின் உச்சியில் நம்மைக் கொண்டு செல்லும்.
உங்கள் பலகீனங்களை விடப்
பலத்தை
அதிகப்படுத்துங்கள்,
சோம்பல்களை விட
உற்சாகத்தை அதிகப்படுத்துங்கள், அறியாமையை விட
அறிவை அதிகப்படுத்துங்கள்.
எதிர்மறைச் சிந்தனைகளை விட நேர்நிலைச் சிந்தனைகளை அதிகப்படுத்துங்கள்
இப்படி உங்களிடமுள்ள அழிவு சக்திகளை விட ஆக்க சக்திகளை அதிகரிக்கச் செய்யும் போது தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.
அப்படி ஏற்படும் நம்பிக்கையை குறைக்க விடாமல் தினந்தோறும் அவற்றை மதிப்பீடு செய்ய வேண்டும்.
நேற்றை விட
இன்று வளர்சியடைந்து உள்ளேன்.
இன்றை விட நாளை வளர்ச்சி அடைவேன்
என்பதில் உறுதியாக இருங்கள்
தன்னம்பிக்கை என்னும்
உந்து சக்தியை
உயர்ந்த குறிக்கோளை நோக்கி வையுங்கள்.
நீங்கள் யாராகவும் இருக்கலாம், படிக்காதவர்களாக இருக்கலாம்.. பரவாயில்லை.
தன்னம்பிக்கை கொள்ளுங்கள்,
உங்கள் ஆர்வத்தை, திறமையை சற்று கண்ணோட்டம் இடுங்கள். அடுத்த கணமே களத்தில் இறங்குங்கள்.
எதையாவது சாதியுங்கள், உங்கள் கண்முன்னே தெரிவதெல்லாம்
வெற்றிப் படிக்கட்டுகளாக இருக்கட்டும்,
வெற்றிப் படிகளில் பயணியுங்கள் மற்றவர்களுக்குச்
சிறந்த முன்னுதாரணி ஆகுங்கள்.
*"ஏமாத்திட்டாங்க"*
*_என்று சொல்வதைவிட._*
*"பயன்படுத்திகிட்டாங்க"*
*_என்பதுதான் பொருத்தமானது._*
*ஆடம்பரத்தை*
*விரும்புவது தவறில்லை.*
*ஆனால்*
*ஆரம்பத்தை மறப்பது*
*தான் மிகவும் தவறு.*
*_இக்கட்டான சூழ்நிலையில்_*
*_நம்மைத் தனியாக விட்டுச்_*
*_செல்லும் உறவுகள் தான்._*
*_தன்னம்பிக்கையையும்_*
*_வாழ்க்கைப் பயணத்தின்_*
*_நம்பகத் தன்மையையும்_*
*_கற்றுத் தருகின்றார்கள்._*
*_நம்முடைய வாழ்க்கை நமக்கு_*
*_மட்டும் தான் வாழ்க்கை._*
*_மற்றவர்களுக்கு அது_*
*_வெறும் வேடிக்கை தான்._*

No comments:

Post a Comment