Friday 1 March 2024

மனதின் அழகு மாறுவதில்லை .

 மனதின் அழகு மாறுவதில்லை .

*_குறைகுடம் எனக்கூறி_*
*_கல்லெறிந்து கொண்டே_*
*_இருந்தனர்........!!_*
*_ஒரு கட்டத்தில் எறிந்த_*
*_கற்களைக் கொண்டு நிரம்பத்_*
*_தொடங்கியது அக்குடம்.......!!_*
_*கவலை எப்போதும் பிரச்சனையை குறைப்பதில்லை.*_
_*அவை குறைப்பதெல்லாம்
நிம்மதியை தான்.*_
நீங்கள் ஒருவரை நேசிப்பீர்களானால், எல்லா குறைபாடுகளுடனும் அவரை முழுமையாக அரவணைத்துக் கொள்ளுங்கள், ஏனென்றால் குறைபாடுகளும் மனிதனின் ஒரு பகுதியாகும்.
கொஞ்ச நேரத்தில்
பறந்துவிடும் என்று தெரிந்தே பறவைகளைத் தாங்கும்
மரக் கிளைகளுக்கு அன்பைப்
பற்றிய யாவும் அத்துப்படி.
முகங்களை கண்டு அன்பு காட்ட வேண்டாம். மனதினைக் கண்டு அன்பு காட்டுங்கள். முகத்தின் அழகு மாறிடக் கூடியது, மனதின் அழகு மாறுவதில்லை.
காலங்கள் காத்திருப்பது இல்லை. ஆனால் நம்மை நேசிக்கும் உண்மையான இதயங்கள் நமக்காக காத்திருக்கும்.
_*எவரின் குறுக்கீடுகளும் ஆதிக்கமும் இன்றி இயல்பாய் பயணித்துக் கொண்டிருக்கும் வரை வாழ்க்கை அழகாகத்தான் இருக்கும்.*_
_*சில மூன்றாம் நபரின் நாடகங்களால் இங்கு பிரிந்தவர்களின் வாழ்க்கை பல உண்டு.*_
_*வேடிக்கை*_ _*பார்க்கின்ற கூட்டத்திற்கு*_
_*பாதிக்கப்பட்டவர்களின் வலிகள் புரியாது.*_
_*பொய்யும், நடிப்பும் கூட்டத்தில்*_
_*கொண்டாடப்படும். உண்மையும், அன்பும், தனிமையில் தள்ளாடும்.*_
_*பொய், புறங்கூறுவது போன்ற செயல்களால் முன்னேறலாம் என நினைக்கக் கூடாது. அது ஒரு நாள் மிகப்பெரிய அழிவில் கொண்டு போய்*_
_*விட்டுவிடும்.*_

No comments:

Post a Comment