Monday 25 March 2024

மாநகர் மதுரையில் ரோபோ சங்கர் மகள் திருமண விழா ஒரு கலைத் திருவிழாக நடைபெற்றது. வாழிய மணமக்கள் பல்லாண்டு.

 மாநகர் மதுரையில்

ரோபோ சங்கர் மகள் திருமண விழா ஒரு கலைத் திருவிழாக நடைபெற்றது.
வாழிய மணமக்கள் பல்லாண்டு.
இன்று காலை மதுரை நாகமலை புதுக்கோட்டை ஜெ பி மகாலில் நடைபெற்ற அருமை இளவல், திரைப்படக் கலைஞர் ரோபோ சங்கர் - திரைப்படக் கலைஞர் பிரியங்கா சங்கர் மகள் திரைப்பட நடிகை இந்திரஜா- அருமைச் சகோதரி, தொடர்வோம் அன்பு இல்ல நிர்வாகி வளர்மதி பழனிச்சாமி மகன் திரைப்பட இயக்குநர் கார்த்திக்
திருமண விழாவில் மனிதத்தேனீ, அலமேலு சொக்கலிங்கம்,
சொ. ராம்குமார், நாச்சம்மை தேவி பூஜா.
மாணவப் பருவம் தொட்டு நமது ரோபோ சங்கர் தனது பேராற்றல் மூலம் இன்று திரைத்துறை மற்றும் சின்னத்திரையில் பெரும் வளர்ச்சி கண்டு உலகப் புகழ் பெற்று மாநகர் மதுரைக்குப் பெருமை சேர்த்து வருகின்றார்.
மிகச் சிறந்த உழைப்பும் பேராற்றலும் பெற்று தனது பழமையான நட்பு வட்டத்தை மறவாமல், தனது உறவுகளை அரவணைத்து,
அதேபோல நமது சகோதரி வளர்மதி பழனிச்சாமி தனது உறவுகளையும், தான் சேவை உள்ளத்துடன் நடத்தி வரும் ஆதரவற்ற மாணவச் செல்வங்களையும், மாநகரின் முக்கியப் பிரமுகர்களையும் ஒருங்கிணைத்து
பிரமாண்டமான திருமணமாக நடத்தினர்.
அரங்கில் எங்கும் திரை நட்சத்திரங்கள் மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்கள், தயாரிப்பாளர்கள் என மகிழ்ச்சி வெள்ளம்.
கூடுதல் சிறப்பு :
பங்கேற்ற பலர் வாழ்த்தியும், பாடல்கள் பாடியும் அதற்கு மணமக்கள் அற்புதமாக ஆடியும் தங்கள் வெள்ளந்தியான நிலையை இயல்பாக காட்டினர்.
இது இறைவன் திருவருளால் சிறப்புக்குச் சிறப்புச் சேர்த்திடும் வண்ணம் அமைந்தது.
வருகை தந்த அனைவருக்கும் சிறப்பான உணவு
மற்றும்
செடிகள் மரக் கன்றுகள் வழங்கப்பட்டது.
திரைத்துறையினர், தொழிலதிபர்கள், உறவினர்கள், நண்பர்கள் என எங்கும் பெருமக்களின் திருக்கூட்டம்.
வாழிய மணமக்கள் வாழியவே.


















No comments:

Post a Comment