Tuesday 19 March 2024

தன்னை அறிதல் . .

 தன்னை அறிதல் . .

_*தனக்குத்தானே தேர்ந்தெடுத்துக்கொண்ட வாழ்க்கையை.*_
_*எந்தப் புகாருமில்லாமல்
அதன் போக்கில்
அனுபவித்து வாழ்வதே ஞானம்.*_
பிரச்சனை தனித்தனியான மனிதரிடம் தான் இருக்கிறது.
ஒவ்வொரு தனி மனிதனும் தன்னைச் சரிசெய்து கொள்ள வேண்டும் என்பதுதான் ஆன்மீகம் என்று அழைக்கப்படுகிறது.
*ஆன்மீகம் என்பது தன்னில் மூழ்குதல்.*
நான் யார் என்பதனுடைய வேறு ஒரு வடிவம்தான் எது நான்.
இந்த விஷயம் இன்னும் செத்துப் போகவில்லை.
எங்கோ சிறிய புல்தண்டாய், எங்கோ ஒரு சிறிய இளம் செடியாய் வெவ்வேறு இடங்களில் கிளை விட்டுக் கொண்டுதான் இருக்கிறது.
இது பெரும் மரமாகவோ, பெரும் காடாகவோ வளரவேயில்லை என்பதுதான் மிகப் பெரிய வேதனை. ஏன் வளரவில்லை என்பதுதான் கேள்வி.
இதற்கு அசாத்தியமான ஒரு உண்மை தேவைப்படுகிறது.
குழுவாக இருக்கிறபோது இந்த உண்மை மறைக்கப்பட்டுவிடும்.
காது கேட்காமல் அடைக்கப்பட்டுவிடும்.
உண்மை
அறிந்து கொள்ளப்படாததற்கு காரணம் மனிதருள் நேர்மை இல்லை.
ஒவ்வொரு தனி மனிதருள்ளும்
நேர்மை இல்லை.
*நேர்மையாக இருப்பது கடினமாக இருக்கிறது. உண்மையாக இருப்பது பெரும் சுமையாக இருக்கிறது. அமைதியாக இருப்பது என்பது பிடிக்காத விஷயமாக இருக்கிறது.*
எனவே, எந்த குழுவிலும் சேராமல், எந்த ஜாதி பெயரையும் சேர்த்துக் கொள்ளாமல் வெறுமே, வெறுமே உள்ளே பார்த்துக் கிட. நல்ல குரு உள்ளே தள்ளிவிட்டு விடுவார்.
யார் நல்ல குரு. தவித்து தவித்து தண்ணீராய் உருகு. எனக்கு நல்ல குரு வேண்டுமே என்று அலறு. அழு. உன் அலறலும், அழுகையும் நல்ல குருவை உனக்கு கொண்டுவந்து சேர்க்கும்.
மற்றபடிக்கு கள்ளத்தனம் செய்பவரை கண்டு வெட்கி நகர்ந்துவிடுவாய். இப்படி இருக்கக்கூடாது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
எனவே, உங்களை அவதானிப்பதற்குண்டான விஷயங்களைத் தெளிவாக தேர்ந்தெடுத்து அவைகளை தனியாக கடைப்பிடிக்கும் போது தெளிவு அதிகமாகிறது.
*குழுவாக கை சேர்க்கும் போது
அவர் இழுத்த பக்கம் நீயும்,
நீ இழுத்த பக்கம் அவரும்
ஆட வேண்டியிருக்கிறது.*
தனியாகத் தானே பிறந்தாய்.
தனியாகத் தானே சாகப்போகிறாய். எனவே தனியாகவே போராடு.
எவரும் இல்லை என்பதைப் புரிந்துகொள்.
அது மிகப் பெரிய ஒரு உண்மை.
மனைவி, குழந்தை, தாய், தந்தை, சகோதரன், நண்பன் எல்லோரும் தற்காலிகமானவரே. நீயே நிரந்தரம். உன்னுடைய சத்தியமே நிரந்தரம். உன்னுடைய ஆத்ம இருப்பே நிரந்தரம்.
அது பல ஜென்மங்கள் தாண்டி வந்ததப்பா. இன்னும் பல ஜென்மங்கள் தாண்டப்போகிறது. ஏதோ ஒரு இடத்தில் அது கரைந்து காணாமல் போகும். இதையெல்லாம் எழுத்தாக்கிக் கொண்டிருக்க முடியாது.
அந்த ஆள் நடிகரானதற்கும், அந்த ஆள் ஆஃபிஸரானதற்கும், இவர் ஓவியர் ஆனதற்கும், இந்த ஆள் கூலித் தொழிலாளியாய் வாழ்வதற்கும் என்ன காரணம் இருக்க முடியும். எந்தக் காற்றோ தூக்கியது. எந்தக் காற்றோ அழுத்தியது. எந்தக் காற்றோ, எப்போது எப்படி எதனால்.
தன்னை அறிவது மட்டுமே நோக்கமாக, எது உன் மனம், மனம் எங்கிருக்கிறது என்று தேடுகின்ற வாழ்க்கையே நோக்கமாக இருப்பதுதான் உன்னை நல்ல கதிக்கு சேர்க்கும்.
இதை தெரிந்து கொண்டால் போதும். இதை புரிந்து கொண்டால் போதும். இதற்குப் பிறகு கற்க வேண்டியது எதுவுமே இல்லை என்று அறிந்து கொண்டால் போதும். இது படித்தால் போதும். இது போதும்.
எல்லாமும் இது தானே கொண்டுவந்து கொடுக்கும். எது கொடுத்தாலும் அதை எந்தவித ஆவலும் இன்றி அனுபவிக்கத் தோன்றும்.
எங்கே எங்கே அலையாது வந்தவை வரவில் வைக்கப்படும். வராதவை பற்றி ஞாபகமே இருக்காது.
அடாடா அடாடா என்ன அமைதி இது. என்ன சந்தோஷம் இது.
என்ன நிறைவு இது.
இது போதும் என்று இருப்பதற்கு
என்ன வேண்டியிருக்கிறது.
யார் தருவார்கள். உள்ளே கேட்கத் துவங்குங்கள். உள்ளே பார்க்கத் துவங்குங்கள்.
ஒரு பாறையின் மீது நின்று உரக்க வெட்டவெளி பார்த்து கத்துவது போல விஷயத்தைச்
சொல்லி முடித்து விட்டேன்.
_*எந்த கடினமான*_
_*சூழ்நிலையிலும*_ _*தகுதியும் திறமையும்*_
_*கொண்டவர்கள் தப்பி*_
_*பிழைப்பார்கள்.*_
_*இந்த உலகத்தில் சாதிக்க வேண்டும் என்றால் மிகையான போராடும் குணம் இருக்க வேண்டும்.*_
_*வாழ்க்கையில் ஏற்படும் சிரமங்களையும் தோல்விகளையும் எதிர்கொள்ளத் தயாராக இருந்தால் எவராலும் எதுவும் கற்க முடியும்.*_
_*வாழ்க்கையில் உழைத்து சோர்வடைவதற்கு முன்பே
ஓய்வு எடுப்பதற்கு பெயர் தான் சோம்பேறி தனம்.*_
வெற்றிக்கான நிரந்தர வழி தோல்வி அடைந்த பிறகும், இன்னும் ஒரு முறை முயற்சி செய்வதே.
தோல்வியில் இருந்து எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்றால் அதுதான் உண்மையான தோல்வி.
உங்களை வெல்லும் தகுதி
தோல்விக்கே இருக்கும் போது. தோல்வியை வெல்லும் தகுதி உங்களுக்கு
இல்லாமலா போய்விடும்.
காலத்தின் மீது பழி போடாமல்
உங்கள் முயற்சியைக் கை விடாமல் தொடருங்கள்.
விளக்கால்
வெளிச்சத்தைத்தான் காட்ட முடியும். பாதையில் நாம்தான் பார்த்துப் போகவேண்டும்.

No comments:

Post a Comment