Wednesday 9 February 2022

சர்ப்பக் காவடி....

 சர்ப்பக் காவடி....

முருகன் கோவிலுக்கு பாதையாத்திரையாக செல்லும் பக்தர்கள் காவடியை சுமந்து கொண்டு ஆடிப்பாடி மகிழ்ந்து இறுதியில் கோவிலை அடையும்போது மனதில் உள்ள பாரங்கள் குறைந்து புத்துணர்ச்சி பெறுகின்றனர்.
திருச்செந்தூரில் மாசித்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. வரும் 16ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.
இந்த ஆண்டு மாசித்திருவிழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அரசு அனுமதி அளித்துள்ளதால் ஏராளமான பக்தர்கள் பாதையாத்திரையாக முருகனைக் காண காவடி சுமந்து சென்று சென்று கொண்டுள்ளனர்.
சர்ப்பக் காவடி சிறப்பு....
முருகப்பெருமானுக்கு பக்தர்கள் வேண்டிக்கொண்டு பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்பக் காவடி, அக்னி காவடி, சந்தனக் காவடி, சர்க்கரைக் காவடி, சர்ப்பகாவடி, மச்சக்காவடி, இளநீர் காவடி, வேல் காவடி, கரும்புத் தூளி காவடி என பல காவடிகள் சுமக்கின்றனர்.
இதில் சர்ப்பக்காவடி சிறப்பானது. நல்ல பாம்பினைக் காவடியில் கட்டிக்கொண்டு வந்து காணிக்கை செலுத்துவது சர்ப்பக் காவடியாகும். சர்ப்பக்காவடி எடுப்பவர் கடும் விரதம் இருப்பார்கள். சர்ப்பக் காவடி எடுப்பவர்கள் 41 நாள் விரதம் இருப்பார்கள்.
அவர்கள் கனவில் ஒரு குறிப்பிட்ட பாம்பை காட்டில் எந்த இடத்தில் இருக்கிறது என்று கனவு வருமாம். அவர்களும் அந்தக் காட்டில் போய் ஒரு குறிப்பிட்ட அந்த இன பாம்பை போய் பிடித்து அதை ஒரு பெட்டியில் வைத்து உப்பிட்டு கொண்டு வந்து, அதைக் காவடியாக சுமந்து வந்து திருச்செந்தூர் கடற்கரையில் விடுவார்கள். அது வேறு எங்கும் யாருக்கும் தொந்தரவு செய்யாமல் நேரே கடலின் உட் பகுதிக்கு சென்று விடும்.
இந்த சர்ப்பக் காவடி முன்னாட்களில் ஒவ்வொரு ஆண்டும் நிறையவே வரும். இப்போது எப்போதாவது அபூர்வமாகத்தான் வருகிறது. இப்படி சர்ப்பக் காவடி எடுப்பது அவரவர்களின் நம்பிக்கை.
ஓம் சரவண பவ...
நன்றி ஆன்மீக களஞ்சியம்

No comments:

Post a Comment