அன்புச்
சொந்தங்களே!வணக்கம்.
மனிதத்தேனீ
திரு.ரா.சொக்கலிங்கம்
அவர்களின் பிறந்தநாளில்
(13-02-2022) அடியேன் எழுதி வழங்கிய வாழ்த்துப்பா!
நூறாண்டு வாழியவே!
-கவிஞர் அரிமழம்
ப.செல்லப்பா.
பேச்சிலோ கருத்திருக்கும்
பண்பிலோ உயர்விருக்கும்!
மூச்சிலோ தமிழிருக்கும்!
முயற்சியோ உடனிருக்கும்!
நடையிலோ வீச்சிருக்கும்!
நட்புகள் விரிந்திருக்கும்!
உடையிலோ தெளிவிருக்கும்!
உள்ளத்தில் அன்பிருக்கும்!
செயலிலே பண்பிருக்கும்!
சிந்தனை தனித்திருக்கும்!
நயமான குணமிருக்கும்!
நாகரிகம் மேலிருக்கும்!
பகைகாணா உளமிருக்கும்!
பாசத்தால் ஈர்ப்பிருக்கும்!
தகைமிக்க மனிதத்தேனீ
தமிழ்போல வாழியவே!
மதுரைவாழ் சொக்கலிங்கம்
மனைவிமகன் உடனோடு
நிதம்அவரோ இளமையுடன்
நூறாண்டு வாழியவே!
நான்மாடக் கூடலிலே
நல்லாட்சி புரிகின்ற
மீனாட்சி அருளாலே
மகிழ்வுடனே வாழியவே!
No comments:
Post a Comment