Saturday 13 February 2021

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

 1. வாழ்க்கையில் சிறந்த முதலீடு பணம் அல்ல, நேரம் தான்

2. எளிமையாய் வாழ்வதே இனிமை
3.வாழ்க்கையில் பகிர்தல் என்பது வகுத்தல் கணக்கல்ல. அது ஒரு பெருக்கல் கணக்கு
4. அதிகம் கேட்க இரண்டு காதுகள். குறைவாய்ப் பேச ஒரு வாய்
5. காலம் எப்போதுமே பதில் சொல்ல தயாராகவே இருக்கிறது. நாம் தான் சரியான கேள்விகளைச் சரியான நேரங்களில் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்
6. எதிலும் இறுக்கம் நம்மை துரு கொள்ளச் செய்யும். தளர்த்திக் கொள்ளுதல் தழைக்கச் செய்யும்
7. நாமே தேடிக் கொண்டால் தனிமை வரம். கொடுக்கப்பட்டால் சாபம்
8. வாழ்தலால் ஒரு அனுபவம் கிடைக்கும். வாசித்தலால் பலரின் அனுபவம் கிடைக்கும், வாசித்துக் கொண்டே வாழ்ந்தால் சிறந்த அனுபவம் கிடைக்கும்
9. நல்ல நட்பு உலகில் எங்கும் பரந்து கிடக்கிறது. தேர்ந்தெடுக்கத் தெரியாமல் நட்பை மொத்தமாய் விமர்சிக்கக் கூடாது .
10.உண்மையும், உழைப்பும் நிச்சயம் வெற்றி கொள்ளும். அதைப் பெற சகிப்பு தன்மையும் பொறுமையும் மிகவும் அவசியம்.

No comments:

Post a Comment