ஆல், அரசு, வேம்பு, அத்தி, மா, பலா, வாழை, பூவரசம் (இன்னும் பல) போன்ற மரங்களின் இலைகளுக்கு மட்டும்
*"இலை"* என்று பெயர்...
அகத்தி, பசலி, வல்லாரை, முருங்கை போன்றவற்றின் இலை
*"கீரை"* ஆகின்றது...
மண்ணிலே படர்கின்ற கொடிவகை இலைகளுக்குப்
*"பூண்டு"* என்று பெயர்...
அருகு, கோரை முதலியவைகளின் இலைகள்
*"புல்"* ஆகின்றன...
மலையிலே விளைகின்ற உசிலை முதலியவற்றின் இலைகளுக்குப் பெயர்
*"தழை"*...
நெல், வரகு முதலியவற்றின் இலைகள்
*"தாள்"* ஆகும்...
சப்பாத்திக் கள்ளி, கற்றாழை போன்ற தாழை இனங்களின் இலைகளுக்குப் பெயர்
*"மடல்"*...
கரும்பு, நாணல் முதலியவற்றின் இலைகள்
*"தோகை"* என்றாகின்றது...
தென்னை, கமுகு, பனை முதலியவற்றின் இலைகள்
*"ஓலை"* என்று சொல்லப்படுகின்றன...
இவ்வாறு தாவரங்களுக்கு வழங்கி வரும் சொற்களுக்குள்ளே இலக்கணம் மட்டுமல்ல,
தாவரவியல் அறிவியலும்
அடங்கி இருக்கிறது..!!!
நன்றி...
No comments:
Post a Comment