Friday 12 February 2021

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

 *இன்றையப் பதின்ம வயதினர் சிலருக்கு கணினியை இயக்குவது நன்றாகத் தெரிகிறது.* ஆனால் பயன்படுத்திய போர்வையை மடித்து வைக்கத்தான் தெரியவில்லை.

*கைப்பேசி* அழைப்புகளை அவ்வப்போது சுத்தம் செய்யத் தெரிகிறது. *ஆனால் சாப்பிட்ட பிறகு தட்டை கழுவி வைப்பதுதான் கடினமாக இருக்கிறது*.
ஆன்லைனில் பயணத்திற்குப் பதிவு செய்யும் வித்தை தெரிகிறது. *எதிரே அமர்ந்திருக்கும் பயணியைப் பார்த்து புன்னகைக்கத்தான் தெரிவதில்லை*.
வாட்ஸ்அப் குரூப்பில் அன்பு சொட்டச்சொட்ட நண்பர்களிடம் தகவல் பரிமாற முடிகிறது. *சொந்தப் பெற்றோரிடம் மட்டும் தூக்கியடிப்பதுபோல பேசத்தான் முடிகிறது*.
எந்த இடத்திலும் ஒரு நிமிடம் தாமதமானால் கோபம் கொப்பளித்துக் கொள்கிறது. ஆனால் *அவர்களுக்காகக் காத்திருக்கும் பெற்றோரின் வலி* *புரிவதில்லை.*
எதைப் பெற்றாலும் உரிமையென எண்ணும் அவர்களுக்கு *கடமைகளும் இருக்கின்றன* என்பது ஒருபோதும் உரைப்பதில்லை.
~ *இறையன்பு.IAS*

No comments:

Post a Comment