Thursday 11 February 2021

எப்பொழுது தெய்வம் நமக்குத் துணை நிற்கும் !

 எப்பொழுது தெய்வம் நமக்குத் துணை நிற்கும் !

1. காகத்தைப் போல என்றும் ஒற்றுமையாக இரு #சனீஸ்வரன் அருகில் வரமாட்டார்
2. நாய் போல நன்றி விசுவாசத்துடன் இரு
#பைரவர் உனக்குச் செல்வத்தை அள்ளித் தருவார்..
3. ஆந்தையைப் போல தீமையிடம் பாதுகாப்பாக விழித்திரு #லட்சுமி வீட்டில் வாசம் செய்வார்...
4. சிங்கத்தைப் போல வீரமாக தைரியத்துடன் இரு
#பார்வதி உன் வீட்டில் வாசம் செய்வார்...
5. அன்னப்பறவை நீரையும் பாலையும் பிரிப்பதைப் போல அறிவுள்ள நல்ல மனிதர்களுடன் நட்புக் கொள் #சரஸ்வதி உன் வீட்டில் வாசம் செய்வார் ...
6. எலி போலத் தொழிலில் ஊழல் செய்யாமலிரு வினைகளை அழிக்கும் #விநாயகர் உன் வீடு
தேடி வருவார்...
7. மயிலைப் போல மகிழ்ச்சியில் எப்பொழுதும் தோகை விரித்தாடு அழகன் #முருகன் உன் வீட்டினில் அவதாரிப்பார்...
8. உன் மனம் உலகப் பிரச்னைகளை கடந்து வானத்தில் கருடனைப் போல பறக்கட்டும் அப்பொழுது #கண்ணன் வருவார் அகத்திற்கு...
9. தீமை எல்லாவற்றிக்கும் அஞ்சாத காளையாய் எதிர்த்து நில், உலகை படைத்த ஜோதியான தந்தை #ஈசனே வருவார் உன் வாழ்வினில் என்றும் துணை நிற்பதற்கு...
வாழ்க வையகம் !!
வாழ்க வளமுடன் !!

No comments:

Post a Comment