முருகனே! செந்தில் முதல்வனே!
மாயோன் மருகனே! ஈசன் மகனே!
ஒரு கை முகன் தம்பியே! நின்னுடைய தண்டைக் கால் எப்பொழுதும் நம்பியே
கை தொழுவேன் நான்!
ஒரு முருகா எந்தன் உள்ளம்
குளிர உவந்துடனே
வருமுருகாவென்று வாய்வெறுவான்
நிற்ப கையிங்ஙணே!
தருமுருகாவென்று தான் புலம்பா
நிற்பத் தையன் முன்னே
திருமுருகாற்றுப் படையுடனே
வரும் சேவகனே!
செந்தில்நாதா சுப்ரமண்யனே! எங்கள் சக்கரவர்த்தி சண்முகனே! அலைவாய் அருளும் கந்தனே! அன்பர்கள் குறை தீர்க்கும் குமரவிடங்கனே! அனைவரையும் காத்தருள்வாய் எங்கள் செந்தூர்
காவலன் ஜெயந்திநாதனே!
நல்லதே நினைப்போம்
நல்லதே செய்வோம்
நல்லதே நடக்கும்.
No comments:
Post a Comment