Wednesday 18 November 2020

அருமை நண்பர் Stanley Rajan அவர்களின் பதிவு பகிர்வு...

 அருமை நண்பர் Stanley Rajan அவர்களின் பதிவு பகிர்வு...

மூக்குத்தி அம்மன் படம் மோசடி சாமியார்களை தாக்குகின்றது எனும் வகையில் இந்து சாமியார்களை அதிகம் தாக்குகின்றது என்கின்றார்கள்
இதில் கண்டிக்கதக்க விஷயம் என்னவென்றால் கிறிஸ்தவ இம்சைகளின் காட்சிகளை யாருக்கோ பயந்து வெட்டிவிட்டு இந்து சாமி காட்சிகளை மட்டும் வைத்தார்களாம்.
இது நித்தி சாமி மற்றும் ஈஷா மையம் என பலரை குறிப்பதாக சர்ச்சைகள் எழுகின்றன‌
எமக்கு நித்தி சாமி, ஈஷா சாமி , ரவிசங்கர் குருஜி போன்றோரிடம் தெரியும் ஆச்சரியம் ஒன்றுதான்
அது ஐரோப்பியர் பலர் ஓடிவந்து அவர்கள் முன் மண்டியிடுகின்றனர், தங்கள் நாட்டிலும் தங்கள் மதத்திலும் பெறமுடியாத ஆன்மாவுக்கான விஷயங்கள் அங்கு இருப்பதாக நம்புகின்றனர்
வெள்ளையர்கள் எளிதில் ஏமாறாதார்கள் அவர்களின் கல்வி முறையும் வளர்ப்பும் புதியன தேடும் சிந்தனையும் சுதந்திர மனப்பான்மையும் அப்படி அவர்களை உருவாக்கி வைத்திருக்கின்றது
அந்த வெள்ளையர்களே ஆன்மாவுக்கான தீர்வு,வாழ்வியல் நோக்கம் தேடி இங்குதான் வருகின்றனர் என்றால் விஷயம் இல்லாமல் இருக்காது
இங்கிருக்கும் கல்வி அறிவில்லா இந்தியர்களை அல்லேலூயா கும்பல் மூளை சலவை செய்வது விஷயம் அல்ல, ஆனால் அறிவில் சிறந்த சிந்தனையில் சிறந்த மேற்குலகவாசிகள் ஓடிவந்து நித்தியிடமும் ஜக்கியிடமும் மண்டியிடுவதுதான் விஷயம்
ஆம் நித்தி மேல் ஆயிரம் சர்ச்சை இங்கு பேசலாம், குதிக்கலாம் ஆனால் வெளிநாடு ஒன்று கூட அவருக்கு எதிராய் மூச்சு விடவில்லை
ஜக்கி மேல் ஆயிரம் குற்ற்சாட்டுகளை இங்கு வீசலாம் ஆனால் அவரின் ஆன்மீக விளக்கத்துக்கு பதில் விளக்கம் கொடுக்க யாருக்கு தகுதி உண்டு?
ரவிசங்கரின் யோக நிகழ்வுக்கு அமெரிக்க ராணுவமே ரகசிய ஏற்பாடுகளை செய்கின்றது
ஆம், இங்கு இந்து சாமியார்கள் குறிவைக்கபடுவதெல்லாம் அரசியல், ஊடக பலம் இன்னும் பலம் கொண்ட இந்து எதிரிகளின் அரசியல்
இவர்கள் வலுபெற்றால் நல்ல அடையாளம் பெற்றால் அறிவுகெட்ட இந்தியனுக்கு சிந்தனை வந்துவிடும் வந்துவிட்டால் அல்லேலூயா மோசடி நிலைக்காது எனும் அச்சம்
இதனால் திட்டமிட்டு பல செய்திகளை பரப்புவார்கள்
நித்திமேல் ஏகபட்ட வழக்கு உண்டு, ஆனால் எது நிரூபிக்கபட்டது என்றால் எதுவுமில்லை அவ்வளவுக்கு வெற்று வழக்குகள்
பங்காரு அடிகள் என பொங்குவார்கள் ஆனால் அவர்மேல் ஒரு குற்றசாட்டு உண்டா என்றால் வாய் திறக்கமாட்டார்கள்.
ஜக்கி மேல் காட்டை அழித்தார் என குற்றசாட்டை வீசுவார்கள் ஆனால் அருகிருக்கும் காருண்யா கல்லூரி பற்றி பேசமாட்டார்கள்
ஜக்கி மேல் பொங்குபவர்கள் கொடநாடு மாளிகை பற்றி மூச் விடுவார்களா?
ஆக இதெல்லாம் திட்டமிட்டு இந்துமதம் மேல் பரப்பபடும் சில திட்டமிட்ட சதிகள்
அதற்காக முழு இந்து சாமியாரும் நல்லவர்கள் என சொல்லமுடியாது அதிலும் மோசடிகள் உண்டு ஆனால் அதைவிட பெரும் மோசடி அல்லேலூயா என கிளம்புவோரிடமும்,அதி தீவிர மூளைசலவை இன்னும் பலரிடமும் உண்டல்லவா?
அதை எல்லாம் ஆர்.ஜே பாலாஜி சொல்லவில்லை? அதை மட்டும் ஏன் மறைக்க வேண்டும்?
மோசடி என்றால் எல்லாமே மோசடி அல்லவா? அதை சொன்னால்தான் என்ன? என்ன தயக்கம்?
தயக்கம் இருந்தால் ஏன் படம் எடுக்க வேண்டும்
ஆர்ஜே பாலாஜி என்ன ஜாதி என எமக்கு தெரியாது, ஆனால் மதமாக இந்துவாக இருக்க முடியும்
அவருக்கு நாம் சொல்லி கொள்வது ஒன்றுதான்
இந்துவாக இருந்து தமிழ்சினிமாவில் இந்துமதத்தை கொச்சைபடுத்திய எந்த கொம்பனும் வாழவில்லை
அது பழைய சினிமாகாரனில் இன்றைய கிரேஸி மோகன் வரை பெரும் பட்டியலாக நீளும், இன்னும் வரும்
கொச்சை படுத்தாவிட்டாலும் இந்துமத சீரழிவு காட்சிகளை ரகசியமாக அனுமதித்த கலைஞன் எவனும் வாழவில்லை
அவன் நடிகனோ,எழுத்தாளனோ, இயக்குநரோ எவனோ, எவனும் நிலைத்ததில்லை அவன் சந்ததி செழித்ததில்லை
ஒருவேளை ஒரு வெகு சிலர் நின்றாலும் அவர்களின் வாரிசுகள் படும் அவஸ்தை கொஞ்சமல்ல, அந்த வாரிசுகள் இனி படும் பாட்டை காலம் காட்டும்
சினிமா காலம் என்பது மிஞ்சி போனால் ஒரு இயக்குனருக்கு 20 ஆண்டு அல்ல அதற்கும் குறைவான வாழ்வே
அதில் எவ்வளவோ நல்ல செய்திகளை சொல்லலாம், தெய்வ நம்பிக்கையினை கொடுக்கலாம், இந்த தேசத்தின் ஞானத்தை பெருமையினை புராண மறைபொருளை சத்தியத்தை ஞான மரபினை கொடுக்கலாம்
மாறாக இந்துமதத்தை கொச்சைபடுத்தித்தான் சம்பாதிப்போம் என்றால் உங்கள் கைகளுக்கு வருவது பணம் அல்ல, சாபம்
உங்களுக்கு வருவது புகழ் அல்ல, பெரும் வம்ச சாபம்
பாலாஜி என்பவர் இதற்கு முன் நாத்திகம் பேசியவன் இந்துமதத்தை இழிவு படுத்திய சினிமாக்காரன் எல்லாம் என்ன பாடுபட்டான்? எப்படி அழிந்தான்? அவனின் வாரிசுகள் என்ன ஆயின என்பதை ஒருமுறை கவனித்தால் நல்லது
மற்றபடி அம்மன் பெயரால் மாபெரும் பொய் உரைத்து இந்துமதத்துக்கு அவர் இழுக்கு சேர்த்திருந்தால் அவரை அம்மனே பார்த்து கொள்ளட்டும்
காலம் காலமாக இங்கு வீற்றிருந்து நியாயம் வழங்கும் அந்த பெரும் சக்தி, சமணம் பவுத்தம் இஸ்லாம் கிறிஸ்தவம் என எத்தனையோ ஆட்சியிலும் அசைக்க முடியாமல் இன்று விஸ்வரூபமெடுக்கும் அந்த பெரும் சக்தி செய்ய வேண்டியதை செய்யும்
தெய்வங்கள் மனிதரை வைத்து விளையாடுமே தவிர மனிதன் தெய்வங்களை வைத்து ஒரு காலமும் விளையாடுதல் கூடாது அது பாவத்தில் எல்லாம் பெரும் பாவம், சாபங்களில் எல்லாம் பெரும் சாபம்
அந்த சாபம் ஏழு ஜென்மமும் தொடரும், ஏழேழு வம்சத்துக்கும் தொடரும்
ஆர்ஜே பாலாஜி அந்த சாபத்துக்கு தயார் என தலை கொடுத்தால் யார் என்ன செய்ய முடியும்?
நன்றி ஐயப்பன் மித்ரா ஸ்ரீ

No comments:

Post a Comment