Saturday 21 November 2020

போராட்டமே வாழ்க்கை

 போராட்டமே வாழ்க்கை

போராட்டத்தைச் சந்திக்காத எந்த உயிரும் பூமியில் வாழ இயலாது. பிறப்பு முதல் இறப்பு வரை போராட்டம் இருந்து கொண்டேதான் இருக்கிறது...
பிறந்த குழந்தை கூட அழுகை என்னும் புரட்சி செய்துதான் தன் தேவைகளை பூர்த்தி செய்கிறது...
போராட்டத்தில் பிறந்து, போராட்டத்தில் வளர்ந்து, போராட்டத்தில் மடிவதுதான் வாழ்க்கை...
வாழ்க்கையில் தங்கள் கொள்கைகளை நிலை நிறுத்திக்கொள்ள ஒவ்வொரு மனிதனும் இவ்வுலகில் போராட வேண்டியுள்ளது...
மனித வாழ்வே அறைகூவல் நிறைந்ததுதான். மனித குலம் காடுகளில் தான் தனது வாழ்வை தொடங்கியது. ஒவ்வொரு கணமும் மரணத்தை எதிர்த்து போராடியே தன்னை தக்கவைத்துக் கொண்டது...
கொடிய விலங்குகள், மலைப்பாம்புகள், நச்சுப் பூச்சிகள் போன்றவற்றை எதிர்த்தே வாழ்ந்து வந்தான் மனிதன். இதற்கிடையே மழை, வெள்ளம், புயல், பூகம்பம் போன்றவையும் மனிதனை எதிர்த்து போர் புரிந்தன...
சரியான நேர்மையான வாழ்க்கை பயணப் பாதை, முட்கள் நிறைந்த கரடு முரடான பாதைதான்...
இந்தப் பாதையில் முட்களாகவும், கரடுமுரடான கற்களாகவும், பிறரின் அவமானப் பேச்சுக்களும், பழிச் சொற்களும், நியாயமற்ற விமர்சனங்களும்தான் நிறைந்திருக்கும்...
கப்பல் வடிவமைக்கப்படுவது கரையில் நிறுத்தி வைக்கப்படுவதற்கு அல்ல...!
வாழ்க்கையும் கரையில் நின்று வேடிக்கைப் பார்ப்பதற்கு அல்ல...! வாழ்க்கைக்கு வழிகள் ஆயிரம் இங்கே இருக்கின்றன...
வாழ்வில் இருந்து விலகி ஓடும் மனிதர்களை விட, எதிர்த்து நின்று போராடுகிறவர்களே உயர்ந்த இடம் பெறுகின்றனர்...
வாழ்க்கைப் பாதையில் பயணிக்கின்றோம் என்றால், நாம் நற் சிந்தனைகளாலும், நற் செயல்களாலும் மலரும் புதிய பயனுள்ள மலர்களால் பாதையை நிரப்ப வேண்டும்...
*ஆம் நண்பர்களே...!*
*வாழ்க்கை என்பது ஒரு போராட்டமே. போராட்டம் இல்லாமல், எதிலும் வெற்றிபெறுவது குதிரைக் கொம்பே...!*
போராளிகள் களத்தில் காயப்படுவதுண்டு. நமக்கும் வாழ்வில் காயங்கள் வரலாம். சில ஆறாத வடுவையும் ஏற்படுத்தலாம்.
மனம் தளர்ந்து விட வேண்டாம்.

No comments:

Post a Comment