Wednesday 18 November 2020

எல்லாம் கூட்டுக் களவாணிகள்தான்..

 எல்லாம் கூட்டுக் களவாணிகள்தான்..

திமுக பொதுச்செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார் துரைமுருகன். ஆனால் அவரை சுற்றிய சந்தேக வளையம் அகலாமல் இருந்தது.
இதன் உச்சமாக துரைமுருகன் அதிமுகவுக்கு தாவுகிறார் என்கிற செய்தியும் முன்பு பரவியது. இதில் உண்மை இல்லாதது போல, துரைமுருகன் வழக்கம் போல கண்ணீர் கசிந்துருக விளக்கமும் தந்தார்.
இந்த நிலையில் குவாரி ஒதுக்கீடு விவகாரத்தில் அமைச்சர் சி.வி. சண்முகம் ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஸ்டாலின் ஒரு அறிக்கையை வெளியிட்டார் நேற்று.
இதற்கு பதில் அளித்து அமைச்சர் சி.வி.சண்முகமும் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 2 மாதங்களுக்கு முன்னர் தனது மருமகள் பெயரில் உங்கள் கட்சி பொதுச்செயலாளர் துரைமுருகன், குவாரி உரிமம் பெற்றிருக்கிறாரே... அவரை ராஜினாமா செய்ய சொல்வீர்களா? என எதிர்கேள்வி கேட்டிருக்கிறார் அமைச்சர் சி.வி. சண்முகம்.
இப்போதும் அதிமுக அரசுடன் மிக மிக நெருக்கமாக(ஊழலிலும்) இருக்கிறார் துரைமுருகன் என்பதை அப்பட்டமாக ஜல்லி ஜல்லியாக போட்டு உடைத்துவிட்டார் சி.வி.சண்முகம் இன்று.

இதுதான் இப்போது தி
முகவில் துரைமுருகனுக்கு எதிரான புகைச்சலுக்கு காரணமாகிவிட்டது.
ஊழல்அரசு ஊழல் அரசு என்று கூறிவரும் ஸ்டாலினும்,கனி மொழியும் பதில்அளிப்பார்களா? எல்லாம் கூட்டு களவாணிகள்தான் என்பதை தமிழக மக்கள் எப்பொழுது புரிந்து கொள்ள போகிறார்கள்..?





No comments:

Post a Comment