Monday 16 November 2020

மனத்தூய்மையின் வழியாக மட்டுமே ஆன்மிகம் ஏற்படும்

 மனத்தூய்மையின் வழியாக மட்டுமே ஆன்மிகம் ஏற்படும்,

ஆன்மிகம் என்பது நேர்மையாகவும் உண்மையாகவும் இருப்பது,
ஆன்மிகவாதிகள் துணிச்சலாக இருப்பவர்கள் வாழ்வின் முழுமையும் நீந்திப் பார்க்கும் வைராக்கியம் அவர்களுக்கு உண்டு நீந்தினால் நனையுமே என நினைப்பவர்களால் ஆன்மிகத்தை அணுக முடியாது,
பயம் இருக்கிற யாரும் இறைமையை அணுக முடியாது
தூய்மையுடன் துலங்கவே ஆன்மிகம் அப்படிப்பட்டவர்களை அழிப்பதற்கு சாத்தியமே இல்லை மெய்ஞான மென்பது பயங்களிலிருந்து விடுபடுவது மட்டுமே /
அன்பு இருக்கும் இடத்தில் பயத்திற்கு இடமில்லை,
நம் உடலை நல்ல ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ள விரும்பினால் உலகைக் கவனித்துக் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் உலகத்தைத் துவேஷித்துவிட்டு உடலைப் பூஜிக்க முடியாது,

No comments:

Post a Comment