Wednesday 25 November 2020

நீ . . .நீயாக இரு.

 நீ . . .நீயாக இரு..!!*

*தங்கம் விலை அதிகம்தான்.*
*தகரம் மலிவு தான். ஆனால்,*
*தகரத்தைக் கொண்டு*
*செய்யவேண்டியதை*
*தங்கம் கொண்டு*
*செய்ய முடியாது.*
*அதனால் தகரம் மட்டமில்லை,*
*தங்கமும் உயர்ந்ததில்லை*
*எனவே,*
*நீ . . .நீயாக இரு !*
*கங்கை நீர் புனிதம் தான்*
*சிலருக்கு, அதனால்*
*கிணற்று நீர் வீண்*
*என்று அர்த்தமில்லை.*
*தாகத்தில் தவிப்பவருக்கு*
*கங்கையாயிருந்தால் என்ன,*
*கிணறாகயிருந்தால் என்ன*
*நீ . . .நீயாக இரு !*
*காகம் மயில் போல்*
*அழகில்லை தான், ஆனாலும்*
*படையல் என்னவோ*
*காக்கைக்குத்தான்*
*நீ . . .நீயாக இரு !*
*நாய்க்கு சிங்கம் போல்*
*வீரமில்லை தான்,*
*ஆனாலும் நன்றி என்னவோ*
*நாய்க்குத் தான்*
*நீ . . .நீயாக இரு !*
*பட்டு போல் பருத்தி*
*இல்லை தான், ஆனாலும்*
*வெயிலுக்கு சுகமென்னவோ பருத்திதான்*
*நீ . . .நீயாக இரு !*
*ஆகாயம் போல்*
*பூமி இல்லைதான்,*
*ஆனாலும் தாங்குவதற்கு*
*இருப்பது பூமிதான்*
*நீ . . .நீயாக இரு !*
*நேற்று போல் இன்றில்லை*
*இன்று போல் நாளையில்லை,*
*அதனால் ஒவ்வொன்றும்*
*அற்புதம்தான், எனவே,*
*நீ . . .நீயாக இரு !*
*அதில் வெட்கப்பட ஒன்றுமில்லை,*
*அதில் வருத்தப்பட ஒன்றுமில்லை,*
*அதில் நொந்துபோக ஒன்றுமில்லை,*
*அதில் பாவம் ஏதுமில்லை,*
*அதில் அசிங்கம் ஒன்றுமில்லை;*
*உன்னை உரசிப் பார்*
*உன்னை சரி*
*செய்து கொண்டே வா*
*நீ . . .நீயாக இரு !*
*உலகம் ஒரு நாள்*
*உன்னைப் போல்*
*வாழ ஆசைப்படும்*
*நீ . . .நீயாக இரு !*
*உலகம் ஒரு நாள் உன்னை உதாரணமாகக் கொள்ளும்*
*நீ . . .நீயாக இரு !*
*உலகம் ஒரு நாள்*
*உன்னைப் பாடமாக ஏற்கும்*
*நீ . . .நீயாக இரு !*
*உலகம் ஒரு நாள்*
*உன் வழி நடக்கும்*
*நீ . . .நீயாக இரு !*
*அடுத்தவனுக்காக மாறி*
*உனக்காக உள்ளோரை*
*இழக்காதே..!*
*நீ . . .நீயாக இரு !*
*நீ . . .நீயாகவே இரு !*
*இன்று*
*உழைத்து பார்,*
*நாளை...*
*வெற்றி நிச்சயம்!*

No comments:

Post a Comment