Monday 16 November 2020

ஒரு தாய் மக்கள் என்ற உணர்வில் ஒன்றிணைவோம்... நெஞ்சம் நிறைந்த தீபாவளி வாழ்த்துகள் -காதர் மொகிதீன்..

 நல்ல தொடக்கம்.

ஒரு தாய் மக்கள் என்ற உணர்வில் ஒன்றிணைவோம்... நெஞ்சம் நிறைந்த தீபாவளி
வாழ்த்துகள்
-காதர் மொகிதீன்..
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது;சமூக நல்லிணக்கத்தில் உலக நாடுகளுக்கு அழகிய முன்மாதிரியாகத் நாம் திகழ்வோம் என அவர் கூறியுள்ளார்.ஒரு தாய் மக்கள் என்ற உணர்வில் நாம் அனைவரும் ஒன்றிணைவோம். தீபாவளி கொண்டாடும் சகோதர சகோதரிகளுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறோம்.
இந்தியத் திருநாடு, பாருக்குள்ளே நல்ல நாடு. இதை வல்ல நாடாக மாற்ற வேண்டுமானால் இந்திய மக்களாகிய நாம் எல்லோரும் ஒரு தாய் மக்கள் என்ற உணர்வில் ஒன்றிணைய வேண்டும்.சமத்துவத்திலும், சமூகநீதியிலும், சமதர்மத்திலும், சமுதாயங்களுக்கிடையிலான சுமூக நல்லுறவு மற்றும் நல்லிணக்கத்திலும் உள்ளங்களால் ஒன்றுபடுவோம். உலக நாடுகளுக்கு அழகிய முன்மாதிரியாகத் திகழ்வோம். இதற்கான சூளுரையை தீபாவளி திருநாளில் ஏற்போம்".என்று கூறியுள்ளார்.
மாற்று மதத்தில் கூட பலர் நாம் ஒற்றுமையாக,அமைதியாக வாழவேண்டும் என விரும்புகின்றனர்.
ஆனால் இந்துக்களாக பிறந்து வளர்ந்து,அதன் மூலம் அனைத்து சலுகைகளையும் பெற்று சுகபோக வாழ்க்கை வாழும் பல ஜந்துக்கள்..தன் சுயநலத்திற்காக,ஒட்டுக்காக இந்து பண்டிகைக்கு வாழ்த்துக்கூட சொல்லாமல் அப்பாவி மக்களை சாதி,மத ரீதியாக பிரித்து வைத்து நேர்மையாளன் போல் வேஷம் போடுகின்றார்கள்.இதை அனைத்து மதத்தினரும் உணர தொடங்கிவிட்டார்கள் என்பதைதான் இந்த பேராசிரியர் காதர்மொகைதீன் அவர்களின் வாழ்த்து செய்தி கூறுகிறது.
நன்றி..திரு காதர் மொகைதீன் அவர்களே.
நன்றி ராஜப்பா தஞ்சை


No comments:

Post a Comment