Thursday 26 November 2020

மனதை எப்போதும் மகிழ்வாக வைத்துக்கொள்வதே கலை

 மனதை எப்போதும் மகிழ்வாக வைத்துக்கொள்வதே கலை.

குழந்தையாக இருக்கும் போது முதன் முதலில்
சைக்கிள் வேண்டும் என ஆசைப்படுவோம்
அடுத்து வளர்ந்ததும் பைக் வேண்டும் என்று
அப்பாவிடம் அடம்பிடிப்போம். அடுத்து கார்
இப்படி வாழ்க்கையில் புதுசு புதுசு என்று
எப்போதும் உற்சாகம் இருந்துகொண்டே
இருக்கும். அது அப்படியே கல்லூரி, வேலை
திருமணம் என்று அடுத்தடுத்த கட்டங்களை
நோக்கி நகர்ந்துக்கொண்டே இருக்கும்
இந்தமாதிரி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு
காலகட்டத்தில் ஒவ்வொரு ஆர்வம் இருக்கும்
அந்த ஆர்வம் இப்போது நிறைய பேருக்கு
குறைகிறதோ என்று தோன்றுகிறது
வாழ்க்கையில் 'இது போதும்' என்று சிலர்
நினைக்கிறார்கள். ஈஸியாக சலிப்படையவும்
செய்கிறார்கள்.
எப்போதும் ஒரு புது அனுபவம்
வைத்துக்கொள்ளுங்கள். நாம் செய்யும்
வேலையில் நாம்தான் பெஸ்ட்டா இருக்கணும்
என்று மனசுல ஆழமா நினையுங்க. என்னென்ன
விஷயங்கள் கற்றுக்கொண்டே இருக்க முடியுமோ கத்துக்கிட்டே இருங்க. வாழ்க்கையில ஒரு
விஷயம் மட்டும் போதும்னு இங்கே இல்லை.
வாழ்க்கைக்கு சந்தோஷம் ரொம்ப முக்கியம். எதுக்காகவோ அந்த
சந்தோஷத்தை நாம விட்டுவிடுகிறோம். எந்த
காரணத்துக்காகவும் அதை இழக்கக்கூடாது.
சந்தோஷம் என்பது சுலபமான விஷயம் அல்ல.
வீடு, பணம் மட்டு மே சந்தோஷத்தை
கொடுத்துடாது. மனதை எப்பவும் சந்தோஷமாக
வைத்துக்கொள்வதே கலை.
நிறைய படித்து, அறிவாளியா இருக்குற ஒருவர்
எப்பவும் உர்ர்ர்னு யார்கிட்டயும் எதுவும் பேசாம
இருந்தா அவரை யாரும் சீண்டக்கூட மாட்டாங்க
அதுவே எப்பவும் சிரிச்சிக்கிட்டே மகிழ்ச்சியாக
இருக்குறவங்களை சுத்தி நிறைய பேர்
இருப்பாங்க. நாம வேலை செய்ற இடத்துல
தொடங்கி எல்லா இடங்கள்லயும் சந்தோஷத்தை
காட்டுறது ரொம்ப முக்கியம்.
யாரோடயும் யாரும் ஒப்பிட்டுக்கொள்ள
வேண்டாம். அது தேவையில்லாம மன
உளைச்சலை கொடுக்கும். நம்ம வாழ்க்கை, நம்ம
ஓட்டம்னு இருக்கணும். நம்ம வேலை நமக்கு
பெஸ்ட்னு இருக்கும். அதுல என்ன புது
அனுபவம் கிடைத்ததுன்னு பார்க்கணும். எதிலும்
தனித்து நிற்கனும்.
நல்ல
பழக்கங்களை கடைபிடிங்க. மற்ற எல்லாத்தையும்
விட முதல்ல குடும்பத்துக்கு முக்கியத்துவம்
கொடுக்கணும். அதுதான் முக்கியம்.

No comments:

Post a Comment