திருமண வரவேற்பை
மக்கள் திருவிழாவாக
நடத்திக் காட்டிய
டாக்டர் பா. சரவணன்..
நேற்று இரவு மதுரை வேலம்மாள் ஐடா ஸ்கட்டர் அரங்கில் நடைபெற்ற பன்முகப் பேராற்றல் மிக்க அருமை நண்பர், சிறந்த மருத்துவர், பல்வேறு பொது நலப் பணிகளைச் செய்து வரும் அறக்கட்டளை தலைவர், அரிமா சங்க முன்னோடி, திரைப்படக் கலைஞர், அரசியல் களத்தில் மக்களின் பேரன்பைப் பெற்ற துடிப்பான இளைஞர், எப்போதும் சுற்றிச் சுழன்று அனைவரிடமும் இன்முகத்தோடு பழகிடும் பண்பாளர் டாக்டர் பா. சரவணன் - கனிமொழி தம்பதியரின் மகன் டாக்டர் அம்ரித்குமார்-டாக்டர் அபூர்வஸ்ரீ
திருமண வரவேற்பு பல்லாயிரம் மக்கள் பங்கேற்று வாழ்த்திட, பல நூறு பெரிய திரை, சின்னத் திரை நட்சத்திரங்கள், நகைச்சுவை மன்னர்கள், அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள், புகழ் பெற்ற மருத்துவர்கள், தொழிலதிபர்கள், உறவினர்கள், நண்பர்கள் என எங்கும் பெருமக்களின் திருக்கூட்டம்.
மிகப்பெரிய அளவில் உணவு மற்றும் பல்வேறு சிறப்பு பழங்கள் என விரிவான ஏற்பாடுகள்.
மணமக்களை வாழ்த்தி மகிழ்ந்த மனிதத்தேனீ, விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தம்பதியர், தியாகராஜர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் கருமுத்து க. தியாகராஜன், காவல் துறை கண்காணிப்பாளர் முனைவர் மணிவண்ணன், சேம்பர் தலைவர்
என். ஜெகதீசன், ஹைடெக் வ. சண்முகசுந்தரம் தம்பதியர், ஹரீஸ் உணவக உரிமையாளர் எல். ஈஸ்வர மூர்த்தி, டெம்பிள்சிட்டி குமார், அரிமா மேனாள் ஆளுநர்கள் செல்லப்பாண்டி தம்பதியர், பாரி பரமேஸ்வரன், ராஜா கல்லூரி நாகராஜன் மற்றும் டாக்டர் பி எஸ். நாகேந்திரன், லெட்சுமணா மருத்துவ மனை டாக்டர் பாலச்சந்தர் , எக்சலன்ட் ஹரிமாதவன், சீ. கிருஷ்ணமூர்த்தி குடும்பத்தினர், கீஷ்டு கானம் துளசி, பொறியாளர் வெங்கட்ராமன், அண. முத்துக்குமார், ஜி டெக்ஸ் கோபால் சகோதரர்கள், பெரீஸ் மகேந்திரவேல், அம்மா மெஸ் செந்தில்வேல், பகவதி, பத்திரிகை பதிப்பாளர் ஜெ ஆர் சி, பேராசிரியர் கருப்பத் தேவன், ஹார்விபட்டி மேனாள் சேர்மன் ராமதாஸ், பைக்காரா உதயகுமார் குடும்பத்தினர், பா ஜ க ராஜரத்தினம், மனோகரன், ம தி மு க மகபூப்ஜான், பரதநாட்டிய ஆசிரியர் சாந்தினி அருணகிரி குடும்பத்தினர், மேனாள் வணிக வரி உயர் அலுவலர் எழுத்தாளர் சி. ஜெயக்கொடி
எனப் பல்வேறு பெருமக்கள் வாழ்த்தி மகிழ்ந்தனர்.
வாயிலில் நின்று டாக்டர் சரவணன் மாமனார் திமுக மூத்த தலைவர் தாய் மூகாம்பிகை சேதுராமன் வரவேற்றார்.
திரை நட்சத்திரங்களின் நிகழ்வை முன்னணி நட்சத்திரம் ரோபோ சங்கர், புலவர் வை. சங்கரலிங்கம், நகைச்சுவை நாவலர் எஸ். திருநாவுக்கரசு தொகுத்து வழங்கினர்.
டாக்டர் பா. சரவணன் தந்தை அரசு உயர்பணியில் ஹானஸ்ட் பாண்டியன் என்று அனைவராலும் அழைக்கப் பட்டவர், நமது கவியரசு கண்ணதாசன் நற்பணிப் பணிகளைப் பல முறை பாராட்டிய பண்பாளர் என்பதை அசைப்போட்டுப் பார்த்து மகிழ்வோம.
மாநகர் மதுரையில் முத்திரை பதித்த மணவிழா.
வாழிய டாக்டர் பா. சரவணன் குடும்பம்.
மணமக்கள் பல்லாண்டு வாழ்க.
No comments:
Post a Comment