Monday 21 November 2022

ஆழ்ந்த இரங்கல். தன் பணிகளால் உயர்ந்த பெருமகன், திருச்சி கே கே நகர் கற்பக விநாயகர் நகரத்தார் சங்கத்தின் நிறுவனத் தலைவர், குழிபிறை ஊராட்சி மன்றத் தலைவராக நீண்ட காலம் பணியாற்றியவர், 88 வயதிலும் கார் ஓட்டிச் சென்று தன்பணியைச் செய்த இளைஞர், கடலில் நீந்தும் பேராற்றல் பெற்றவர், சிறந்த தொழிலதிபர்,திருக்கார்த்திகைத் திருநாளில் பிறந்தவர், சத்தமில்லாமல் சாதனை படைத்த பெரி. சி. சுப்பையா செட்டியார் அவர் பிறந்த நாளான இன்று அதிகாலை இறைவன் திருவடி அடைந்த செய்தி அறிந்து கவலையுற்றேன். ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அவர்களது இறுதிச்சடங்கு நாளை காலை 11 மணியளவில் திருச்சி கே கே நகர் எண் 45 ராஜாராம் சாலையில் உள்ள வீட்டில் நடைபெறுகிறது. -மனிதத்தேனீ தகவல் :மா. சோம. இராமநாதன்


 

No comments:

Post a Comment