Thursday 10 November 2022

* வாழ்க்கை ஒன்று தான்*

 * வாழ்க்கை ஒன்று தான்*

* உலை அரிசிக்குத் தெரிவதில்லை.
அது உருமாறிப் பலரின் பசியாற்றப் போவது...!*
* ஊறும் அரிசிக்குத் தெரிவதில்லை.
அது அரைபட்டுப் பின் அடுப்புக்குப் போவது...!*
* அட்சதை அரிசிக்குத் தெரிவதில்லை...
அது மங்கலப் பொருளாகி ஆசிர்வதிக்கப் போவது...!*
* வாய்க்கரிசிக்குத் தெரிவதில்லை...
அது சந்ததிகள் கையால் சவத்தின் வாய்க்குப் போவது...!*
* ரேசன் அரிசிக்குத் தெரிவதில்லை...
அது ஏழை வீட்டில் மட்டுமே உணவாகப் போவது...!*
* அரிசி ஒன்று தான்
ஆனால் பயன் வேறு வேறு....!*
* வாழ்க்கை ஒன்று தான்
அது வாழ்பவனையும்
வாழும் விதத்தைப் பொறுத்தது....!*

No comments:

Post a Comment