Wednesday 16 November 2022

வாழிய பல்லாண்டு. இன்று அகவை 62 இல் தடம் பதிக்கும் அன்புச் சகோதரர், எங்கெல்லாம் சிறப்பான விழா நடக்கிறதோ அங்கெல்லாம் காட்சி தரும் விழா நாயகர், திரைப்படத் துறையில் விநியோகஸ்தர், திரையரங்கு என திரையுலகில் வலம் வந்த குடும்பத்தின் செல்லப் பிள்ளை, மதுரை நகரத்தார்களின் முன்னோடி, மற்றும் எங்கள் இனியவர் மேலைச்சிவபுரி ஆண்டியப்பன் செட்டியாரின் அருமை மாப்பிள்ளை, நகரத்தார் சமூகத்தின் வரலாறு, அரசியல் வரலாறு, திரையுலக வரலாற்றை விரல் நுனியில் வைத்துள்ள நினைவாற்றல் மன்னன், வலையபட்டி வடு. கண்ணன் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ


 

No comments:

Post a Comment