Monday 21 November 2022
சமூக சேவகர், பா ஜ க மூத்த முன்னோடி கே டி ஹரிராம் புகழஞ்சலி. நேற்று இரவு மதுரை திருநகர் மகாலெட்சுமி நெசவாளர் காலனியில் உள்ள அரங்கில் அண்மையில் வாகன விபத்தில் தலைக் காயம் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி இறைவன் திருவடி அடைந்த பா ஜ க மூத்த முன்னோடி, ஸ்ரீ மன் நடனகோபால நாயகி சுவாமிகள் இயக்கத்தின் தலைவர், சாமானிய மக்களின் நலனில் பெரிதும் அக்கறையுடன் உதவும் உள்ளம் கே டி ஹரிராம் அவர்களுக்கு இரங்கல் கூட்டம் திருநகர் பேரூராட்சி மேனாள் சேர்மன் ஆர் கே பலராமன் தலைமையில், சேவா சங்கத் தலைவர் கே எஸ். தங்கமணி கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் நடைபெற்றது. மனிதத்தேனீ ரா. சொக்கலிங்கம் நினைவுப் பேருரை ஆற்றுகையில் குடும்பத்தின் வறுமை நிலையிலும் ஊருக்கு உழைத்திடும் உள்ளத்துடன் சுற்றிச் சுழன்று பணியாற்றியவர் என்றார். சமூக சேவகர் பொள்ளுமணி, எல் கே பாலாஜி, ஜெயராஜ், சுரேந்திரன், ஜெயக்குமார், விஜயகுமார் உள்ளிட்ட பலர் இரங்கல் உரை ஆற்றினார்கள். அரங்கம் முழுவதும் பங்கேற்றவர்கள் முன்னதாக மெளன அஞ்சலி செலுத்தினர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment