மனதால் கூட தீங்கு நினைக்காதீர்கள்.
அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தவர் ஆபிரகாம் லிங்கன். ஒருநான் அவரைச் சந்திக்க வந்த ஒருவர், ""ஐயா எனக்கு ஒருவன் தீங்கு செய்துவிட்டான். அதை என்னால் மறக்க முடியவில்லை. தீர்வு சொல்லுங்கள்'" என்று கேட்டார். சிறிது நேரம் யோசித்தவர். " உங்கள் கோபம் தீர, அவரை விமர்சித்து கடிதம் எழுதுங்கள். என்னிடம் கொண்டு வாருங்கள்" என்றார்.
அவரும் கடிதத்துடன் வந்தார். "நீங்கள் கூறியபடி எழுதியுள்ளேன். இதைத் தபாலில் அனுப்பவா" எனக் கேட்டார்.
என லிங்கன் கேட்டதற்கு,
"ஆம்
எனச் சொன்னார்.
"சரி, கடிதத்தை
குப்பைத் தொட்டியில் போடுங்கள். அவரை மன்னியுங்கள்.
மனச்சுமை குறையும்” என்றார்.
பிறர் செய்யும் தவறுகளை மறந்தால் மனம் லேசாகும். அதுவே மன்னித்தால் மன நிறைவு உண்டாகும். இதைப் பின்பற்றினால் எப்போதும் அமைதி இருக்கும்.
ஒருவர் நமக்கு தீமை செய்கிறார் என்றால், பதிலுக்கு நன்மைதான் செய்ய வேண்டும். மனதால் கூட அவருக்கு தீங்கு நினைக்கக் கூடாது. இந்த மனப்பக்குவம் இருந்தால் நமது வாழ்வு வளமாகும்
No comments:
Post a Comment