Saturday 19 November 2022

உணர்ச்சியும் அன்பும் ..

 உணர்ச்சியும் அன்பும் ..

உங்களின் நம்பிக்கை
மலைகளைக் கூட நகர்த்தி விடும்.
உங்களின் சந்தேகங்கள் இல்லாத மலைகளை உருவாக்கி விடும்.
கட்டவிழ்த்து விட்ட
மனதைக் கட்டுப்படுத்த கற்றுக்கொண்டால் போதும்.
காட்டு தீயென்ன
காட்டறாற்று வெள்ளம் கூட
கைக்குள்
அடங்கிவிடும்.
ஒருவரின் செயல்
பிடிக்கவில்லை என்றால்
அவர்களைப்
பார்த்து கோபப்படுவதை விட
அவர்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை
படிப்படியாகக் குறைத்து விடுங்கள் .
காற்றை அழைக்க முடியாது
ஆனால்
கதவுகளைத் திறந்து வைக்க முடியும் .
கடவுளும் அப்படித்தான்.
யார் ஒருவர் இல்லாத தருணம்
நிம்மதியின் அவசியத்தை
உணர்கின்றமோ
அவர்களை இழக்காமல்
இருப்பதுதான்
ஆகச்சிறந்த ஆறுதல்.
உள்ளத்தில் மகிழ்ச்சி இல்லா விட்டாலும்,
வெளித் தோற்றத்தில் புன்னகைத்துப் பழகுங்கள்.
அது காலப் போக்கில் நிஜமாகவே உங்கள் உள்ளத்திலும் மகிழ்வை உண்டாக்கி விடும்.
அறிவாளியை விலை
கொடுத்து வாங்கி விடலாம்.
உணர்ச்சி உள்ள
மனிதர்களையும்,
அன்பான மனிதர்களையும்
விலை கொடுத்து வாங்க முடியாது.

No comments:

Post a Comment