Monday 28 November 2022

வாய்ப்புகள் தானாக வருவதில்லை.

 வாய்ப்புகள் தானாக வருவதில்லை.

*உங்கள் சொந்த தொழிலிலோ,அல்லது நீங்கள் பணி செய்யும் நிறுவனத்தையோ முன்னேற்றுவதற்கு தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்.*
*அப்போது தான் சொந்தத் தொழிலையும், நிறுவனத்தையும் முன்னேற்றம் அடைய வைக்க முடியும்.*
*எதையும் ஏனோதானோ என்று செய்ய வேண்டாம்.. உங்கள் தொழிலும்,நீங்கள் பணி புரிகின்ற நிறுவனம் முன்னேறினால் தான் உங்களால் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள்.*
*அலைகள் ஓய்ந்தப் பின்னர் கடலுக்குள் இறங்குகிறேன் என்பதும், வாய்ப்புகள் வரும் வரை காத்து இருப்பேன் என்பதும் ஒன்று தான்.*
*அலைகள் ஒருபோதும் ஓயப்போவதில்லை வாய்ப்புகள் ஒருபோதும் தானாக வருவதில்லை.*
*சூழ்நிலைகளுக்கு ஏற்ப வாய்ப்புகளை நாமே உருவாக்கிக் கொண்டு வாழ்க்கையில் முன்னேறிச் செல்வது தான் புத்திசாலித்தனம்.*
*முயன்றால் முடியாதது ஏதும் இல்லை.*
*உங்கள் கைகளில் கிடைத்திருக்கும் ஒவ்வொரு நாளையும்*
*ஒவ்வொரு மணிநேரத்தையும் ஒரு வரமாகக் கொண்டாடுங்கள்.*
*உங்கள் மீது அன்பு செலுத்துபவர்களுக்கு பல மடங்கு அன்பை அளித்து மகிழ்ச்சியாக வாழ்க்கையை வாழுங்கள்.*
*பிரச்சனைகள் எதுவும் நிரந்தரமல்ல இறைவன் அருளால் விரைவில் எல்லாம் சரியாகும்.*
*உங்கள் எண்ணங்களால் உங்கள் வாழ்க்கையையே மாற்ற முடியும்.*
*இறைவனின் பரிபூரண அருளால் உங்கள் வாழ்க்கை வரமாகட்டும்.வளம் ஆகட்டும்.*

No comments:

Post a Comment